
போன வாரம் நானும் என் தம்பியும் அக்கா வீட்டுக்கு போயிருந்தோம். அக்காவுக்கு சொல்லப்போனால் வீடெல்லாம் கிடையாது. தென்னந்தோப்பு, சுற்றி வயல்வெளி தண்ணீருக்கு கிணறு, கிணற்றை ஒட்டிய மோட்டார் ரூம், அதனோடு இணைந்த ஒரு தகர கூறை ரூம். இந்த தகர கூறை ரூம் தான் அக்காவின் வீடு. அக்காவின் வீட்டுக்குள் 24 மணி நேரமும் டீவி ஓடிக்கொண்டிருக்கும் (உபயம் அக்கா மகள்). மாமா, புதிய திரைப்படம் வந்துவிட்டதென்றால் எங்கேயிருந்தாவது டிவிடி வாங்கிவந்துவிடுவார். என் அக்கா மகள் ஒரு தெய்வப்பிறவி, பின்னே "ஒரு வினாடி கூட காணச்சகிக்காத படங்கள்" என்று தமிழ் பட ரசிகர்களே தியேட்டரை விட்டு விரட்டிய படங்களை கூட பத்து பதினைந்து முறை பார்த்துவிடும் சக்தி மனிதப்பிறவிக்கா இருக்கமுடியும்??
அக்காவின் சமயலறை வீட்டுக்கு வெளியே திறந்தவெளி விறகு அடுப்பு தான். நான் பொதுவாக தெய்வப்பிறவியை தொந்தரவு செய்வதில்லை அதனால் அக்கா சமயல் செய்யும்போது "உள்ளூர் பொறனி" பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்துவிடுவேன். அன்றும் அது போல அடுப்படி அருகில் அமர்ந்து அக்காவிடம் ஒரு வாரம் ஊரில் என்ன நடந்தது என்று Frame By Frameஆக விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
டீவி வால்யூம் அதிகமாக இருந்ததால் உள்ளே ஓடும் வசனங்களை தெளிவாக கேட்கமுடிந்தது. ரகுவரன் தனது பாணியில் சிறப்பாக வசனம் பேசிக்கொண்டிருந்தார். சரி ஒரு நிமிடம் என்ன படம் என்பதை கண்டுபிடிக்கும் ஆவலோடு வசனங்களை கேட்க ஆரம்பித்தேன். தனுஷ் தனது வழக்கமான பாணியில் அப்பா மேல் உள்ள அளவுக்கு மிஞ்சிய பாசத்தால் வாடா, போடா, மாமூ, மச்சி, இன்ன பிற கெட்ட வார்த்தைகளை சராமரியாக உபயோகித்துக் கொண்டிருக்க "என்னடா இது?" என்றேன் என் தம்பியிடம். என் மனதைபுறிந்து கொண்டவனாக, "அப்பாவை நண்பன் மாதிரி நடத்துறாராம்" என்றான். எங்கள் அப்பாவை நாங்களும் நண்பன் போலத்தான் நடத்துவோம் அதற்காக எந்த நண்பனையும் இப்படி கேவலமாக நடத்தியதில்லை. எனக்கு தோன்றிய அதே எண்ணம் என் தம்பிக்கும் தோன்றியிருக்க வேண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.
பிறகு நடந்த உரையாடலில் (அட டீவியில் தான்பா) தனுஷ் வேலை தேடி ஒரு ஐடி கம்பனியில் கலந்துறையாடும் காட்சியில் வரும் வசனங்களை கேட்டேன். எல்லாரும் ஏதோ பேச தனுஷ் மட்டும் யா.. யா... என்று சொல்லிக்கொண்டிருப்பார். உடனே யாரோ ஒரு பெண் இவரை தமிழிலேயே பேசச்சொல்ல(கதாநாயகியாகத்தான் இருந்திருக்க வேண்டும், இதை கண்டுபிடிக்க CBIயா வரவேண்டும்?)... தனுஷ் க்கும்.. க்கும்... (தொண்டைய சரிசெய்துகொண்டு), "வாக்காளர் பெருமக்களே... நீங்கள்...." என்று ஆரம்பித்து ஒருவழியாக முடிக்கிறார் (ஏனோ எனக்கு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒட வேண்டும் என்று எழுந்த அனிச்சை உணர்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்)!
அடுத்ததாக தனுஷ் இன்டர்வியூவுக்கு செல்கிறார், செல்வதற்க்கு முன் வழக்கம் போல அப்பாவை "உன்னை யாரு இங்க வரச்சொன்னது, உன் மூஞ்சியில முழிச்சுட்டேன்ல இன்னி உருப்பட்டாப்லதான்" என்று நல்லவிதமாக ஆசீர்வதித்துவிட்டு செல்கிறார் (இது போன்ற பாசத்தை நீங்கள் உங்கள் தந்தையிடம் காட்டியதுண்டா?? உங்கள் மகன்கள் உங்களிடம் காட்டியதுண்டா?? அப்படியென்றால் உங்களுக்குள் நண்பர்கள் போண்ற உறவு இல்லை! அட நான் சொல்லலைபா தனுஷ் சொல்லுறார்). இன்டர்வியூவில் Mutithread, semaphore, என்று ஏதேதோ வார்த்தைகள் ஒலிக்க. எனக்குள் விழிப்பதற்க்கு காத்திருந்த மிருகம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது!
சில சமயம், ஒரு சில கொலைவெறி படங்களை நான் சில மணிநேரம் பார்ப்பதற்கு இந்த கொடூர மிருகம்தான் காரணம். ஒரு சமயம் விஜய் நடித்த "புதிய கீதை" எனும் படத்தையே 45 நிமிடம் பார்த்திருக்கிறேன் என்றால் பாருங்களேன்!!!! இந்த கொடிய மிருகம் என்னை எழுப்பி வீட்டுக்குள் அழைத்து சென்றது, என் தம்பியும் ஆர்வமாக பின்தொடர்ந்தான். "என்ன படம் டீ...?" என்றேன் தெய்வப்பிறவியிடம். அவள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை தனது கடமையில் கண்ணாக இருந்தாள். "இந்த ரேஞ்சுல டீவி பாத்தா ஏழாவது ஏழு வருசங்கழுச்சு தான் பாஸ் பண்ணப்போற" என்று கூறி என் மீசையில் இருந்த மண்ணை தட்டிவிட்டேன் (அதற்கும் No Reaction).
சரி என்று டீவி பக்கம் கவனத்தை திருப்பினேன். தனுஷ் கணினி முன் அமர்ந்து ஏதோ டைப் செய்ய ஆஃபீஸில் உள்ள அனைத்து கணினியிலும் ஏதேதோ ஓட அனைவரும் மிரள்கின்றனர் (நான் உள்பட). என் தம்பி என்னை திரும்பி பார்த்தான். "இவன் சாஃப்ட்வேர் இன்சினியர், எப்படி வந்த உடனே அதிரவைக்கிறான் பாரு, நீயும்தான் இருக்கியே பூமிக்கு பாரமா, வெளிய சொல்லாத நீ ஒரு சாஃப்ட்வேர் என்சினியர்னு அது தனுசுக்குதான் அசிங்கம்" என்ற எள்ளல் அந்த பார்வையில் இருந்தது. உடனே யாரே ஒரு ஜென்டில்மேன் தனுஷை/நயன்தாராவை செருப்பால் அடிக்காத குறையாக திட்ட. என் தம்பியும் தெய்வப்பிறவியும் நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். இப்படித்தான உன் ஆபீஸ்லயும் செருப்படி வாங்குவ என்று நினைத்திருப்பார்கள்.
இவ்வளவு அவமானங்களுக்கு பிறகும் நான் வெட்கங்கெட்டு போய் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தனுஷ் வெகுன்டெழுந்து ஓவர் நைட்டில் பிராஜக்டை முடித்து ஏதேதோ அச்சடித்து தள்ளுகிறார். அனைவரும் வியக்கின்றனர் (அட நாங்களுந்தாம்பா... அதை வேற உங்களுக்கு அடிக்கடி சொல்லனுமா?). உடனே நயன்தாரா தனுஷ்மீது பாசப்பார்வை வீச காதல் அரும்பி கனடாவில் ஒருகுத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடப்போகிறார்கள் என்ற சூழ்நிலை உருவாவது அறிந்து எழுந்து வெளியே ஓடினேன். என் தம்பியும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான், உள்ளே தெய்வப்பிறவி அடக்கமுடியாத சிரிப்பால் கட்டிலிலிருந்து கீழே தடால் என விழும் சத்தம் கேட்டது. விழுந்தும் உருண்டு உருண்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.
இந்த மேட்டர் மக்களுக்கு எப்படி லீக்கானது என தெரியவில்லை அனைத்து பதிவுகளும், குமுதம், ஆனந்த விகடன் என பல பத்திரிகைகளும் "யாரடி நீ மோகினி" பயங்கர காமடி படம் என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன!!
ஊர் உலகத்துக்கே தெரிந்து இவ்வளவு அவமானம் ஆகிவிட்ட போது, வாழ்ந்து என்ன பயன் என்று வாழ்கை வெறுத்து கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்க தயாரானேன். என் தம்பி என்னை தடுத்து ஏற்கனவே இந்த படத்திலெல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து ரகுவரன் தற்கொலை செய்துகொண்டார், நீ அடுத்த தனுஷ் படத்தை பார்த்துட்டு ட்ரை பண்ணு என்று நிறுத்தினான்.
ரகுவரன் எனும் சிறந்த ஒரு நடிகரின் தற்கொலைக்கு காரணமான இந்த குழு மீது யாராவது நடவடிக்கை எடுப்பார்களா?? நான் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் இதை எனது கடைசி கடிதமாக Law Enforcement Units எடுத்துக்கொள்ளட்டும்.
:'-(
Disclaimer:
இது வெறும் கதைதான், படம் பார்த்த அந்த ஐந்து நிமிடங்கள் எனக்கு ஏற்பட்ட இரத்த கொதிபின் எல்லையை காட்டுவதற்கு தான் தவிற அவரின் மரணத்தை விளையாட்டாக எண்ணும் நோக்கம் எமக்கில்லை. ஒரு அனானி அவர்கள் இதை Literalஆக எடுத்துக்கொண்டதால் இந்த டிஸ்கி.
வண்டி சேலத்தை தாண்டி சிறிது தூரம் வந்திருந்தது. நன்றாக விடிந்து விட்டதால் நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். திடீரென "டமால்(Ka-Boom)" என ஒரு பெரிய சத்தம். எந்த பிரச்சனைக்கும் நான் கடவுளையெல்லாம் தொந்தரவு செய்ததில்லை. இருப்பினும் என்னையறியாமல் "கடவுளே, சத்தம் இந்த பஸ்ஸிலிருந்து வந்திருக்க கூடாது!" என்று வேண்டிக்கொண்டேன். முழுவதுமாக நினைத்து முடிப்பதற்குள் பஸ் ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. அந்த நேரத்தில் மட்டும் இந்த கடவுள் என் கையில் கிடைத்திருந்தால் கைமா பண்ணியிருப்பேன் ஒரு மனிதனுக்கு இத்தனை சோதனையா??
டிரைவர் இறங்கி வருவதற்குள் நான் குதித்து இறங்கினேன். இப்போது வண்டியை ஓட்டுவது வேறு டிரைவர், கூட அமர்ந்திருப்பது வேறு கிளீனர். பழையவர்கள், ஒரு வேளை சேலத்தில் ரயில் தண்டவாலத்தில் தலையைக்குடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. முன்பக்க இடது டையர் முழுவதுமாக உயிரை விட்டிருந்தது!!! டிரைவர் துடிப்பாக அங்கும் இங்கும் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருந்தார். பின்பு தலையில் கையை வைத்து நின்றுவிட்டார். எனக்கு தலை சுற்றியது. என்னய்யா ஸ்டெப்னி இல்லையா என்றேன். ஸ்டெப்னி இருக்கு ஸார் ஆனா ஜாக்கிதான் இல்லை என்றார்.


மயக்கம் போட்டு விழுந்து விடக்கூடாது என்பதற்காக திறந்திருந்த கதவை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்!!! சரி இப்ப என்ன செய்யலாம் என்று கேட்டேன். ஏதாவது ஒரு லாரியை நிறுத்தி ஜாக்கியை வாங்கலாம் சார் என்றார் டிரைவர். அனைத்து லாரி டிரைவர்களுக்கும் பர்வீன் மீது கெட்ட காண்டு என்று நினைக்கிறேன். எங்களை பார்த்தவுடன் ஒதுங்கிக்கூட போகாமல் உரசிக்கொண்டு போனார்கள். எனக்கென்னவோ அடுத்து வரும் லாரியை நிறுத்த முயன்றால் நிச்சயம் நசுக்கிவிடுவான் என்று தான் தோன்றியது. பஸ்ஸில் இன்னும் சில பயணிகள் கடும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். "இந்த ரணகளத்திலும் குதுகலமாய்" இருக்கும் அவர்கள் மீது பொறாமையாக இருந்தது. எங்களோடு இன்னும் சில பயணிகள் சேர்ந்துவிட்டனர். எங்களது பாவப்பட்ட முகங்களை பார்த்து ஒரு லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி ஜாக்கி கொடுத்து உதவினார். ஜாக்கியை எடுத்துக்கொண்டு கிளீனர் பஸ்ஸுக்கடியில் சென்றார். நான் மொபைலை எடுத்து பர்வீன் ஆபீசுடன் தொடர்புகொள்ள முயன்றேன்.

மொபைலில் ஒரு 15 நிமிட வாக்குவாதத்துக்கு பின் பர்வின் ஆபீஸிலிருந்து வேறு பஸ் அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். எப்படியும் பஸ் ரெடியாகிவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரம் ஆனது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் குனிந்து பஸ்ஸுக்கடியில் இருந்த கிளீனரிடம் என்ன ஆச்சு என்று கேட்டேன். பஸ்ஸின் அடிப்பாகம் மிகவும் தாழ்வாக இருந்ததால் ஜாக்கியை ஃபிட் பண்ண முடியவிலை என்றார்!!!! இதை கண்டு பிடிக்க ஒன்னேகால் மணிநேரம்!! இதற்குமேல் அங்கே நின்றால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றியது. நானும் என் தங்கையும் நாமக்கல் நோக்கி செல்லும் பஸ்களை நிறுத்திப்பார்த்தோம்... ஊஹூம் யாரும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனக்கென்னவோ பர்வீன் பஸ் பக்கத்தில் நிற்பதால்தான் இந்த பிரச்சனை என்று தோன்றியது. சற்று தூரம் நடந்து சென்று பிறகு பஸ்ஸை நிறுத்த முயற்சித்தோம், சரியாக யூகித்தீர்கள் பஸ் எங்களை ஏற்றிக்கொண்டது. நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் நடுரோட்டில் 9,00 மணி பர்வீன் பயணிகள் யாருமில்லாமல் அம்போ என நின்றிருந்தது! இந்த உலகத்தில் நாம் மட்டுமே பாவப்பட்ட ஜென்மம் இல்லை என்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் வண்டிகள் அனைத்தும் கூட்டமாக இருந்ததால். ஒரு கூட்டமில்லாத வண்டியை பார்த்து ஏறினோம். அந்த வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி செம்மன் காடு, வயல் வெளி, எல்லாம் சுற்றிக்கொண்டு சுமார் 2 மணி நேரம் 15 நிமிடம் கழித்து திண்டுக்கல் வந்தது. அடுத்து நான் எந்த புதிய அனுபவத்திற்கும் தயாராக இல்லை, அதனால் திண்டுக்கல்லில் இருந்து சோலைமலை பஸ்ஸில் செல்ல தீர்மானித்தேன். வண்டி கிளம்ப 45 நிமிடம் ஆகும் என்றார்கள், இருந்தாலும் பரவாயில்லை என்று ஒரு ஜூஸை குடித்துவிட்டு காத்திருந்து ஏறினோம். ஒரு வழியாக 18 மணி நேர பயணத்துக்குப்பின் மதுரை வந்து சேர்ந்தோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!! லக்கி லுக் பாணியில் சொல்ல வேண்டுமானால் "மதுரை வந்து சேர்வதற்குள் தாவுதீர்ந்து டவுசர் கிழிந்து விட்டது!"
இது பர்வீனில் எனக்கு முதல் அனுபவமல்ல, இந்த பயணத்துக்கு சில மாதம் முன்பு நானும் என் நண்பனும் பர்வீனில் சென்றோம். நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். சேலம் பேருந்து நிலையத்தை தான்டும் போது திடீரென எனக்கு மேலிருந்து தீப்பொறிகள் கொட்டின! அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் படார் என்ற சத்தத்துடன் தீப்பற்றிக்கொண்டது. எனக்கு பயங்கர குழப்பம்! பிறகு தான் தெரிந்தது பர்வீனில் ஏற்றியிருந்த goods மிகவும் அதிகமாக இருந்ததால் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கியிருந்தனர். அது மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பிகளோடு விளையான்டு இந்த வானவேடிக்கை காட்டியுள்ளது. சில வினாடிகள் வண்டி நின்றது, "சுனா, பானா உனக்கு ஒன்னும் இல்லை போயிக்கிட்டே இரு..." என்று என் நண்பன் முனுமுனுக்கவும் வண்டிகிளம்பவும் சரியாக இருந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது, இறங்கிப்பார்த்த போது நான்கு பக்க டயர்களிளும் காற்று மிகக்குறைவாக இருந்தது. எனக்கோ ஒரே ஆச்சர்யம் எப்படி ஒரு வண்டியில் ஒரே நேரத்தில் இத்தனை டையர்கள் பஞ்சர் ஆகும். பிறகு கிளீனர் சொன்னார் வண்டியின் உயரத்தை குறைப்பதற்காக காற்றை கழட்டிவிட்டார்களாம்!!!!!! இதில் இன்னொரு அதிசயம் என்ன வென்றால் அந்த பஸ் குறைந்த காற்றோடு மதுரை வந்து சேர்ந்து விட்டது (3 மணி நேரம் தாமதமாக)!!
மேட்டர் தெரியுமா உங்களுக்கு? நமது கில்லி, இளைய தளபதி, டாக்டர்(?) ஜோசப் விஜய் தனது கட்சிக்கு, Ooopsie... மன்னிக்கனும் தனது மன்றத்துக்கு கொடி அறிவிக்கப் போகின்றாராம்!!!!
நம்ம நாட்டுல இந்த கொடிகளோட தொல்லை தாங்கமுடியலைப்பா, கர்நாடகாவுல தேசியக்கொடி பறக்குதோ இல்லையோ தெருத்தெருவுக்கு சிகப்பு மஞ்சள் கொடி பறக்குது. போகின்ற போக்கில் எக்கச்சக்கமான கொடிகளை பார்த்து நமக்கெல்லாம் நமது தேசியக்கொடி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தெரு ஓரம்(?) நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பங்களை ரோடு போடும் போது மாநகராட்சி அகற்றுவதற்கு படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது!
எப்படியோ முதலமைச்சர் சீட்டுக்கு அடுத்த போட்டியாளர் ரெடியாகிக்கிட்டிருக்கிறார்!!! வாங்க விஜய் வந்து நீங்களும் சீக்கிரம் களத்துல குதிங்க!!
பார்க்க சுட்டி: ThatzTamil
முதலில் நான் கடிகாரத்தை, ஓடுகிறதா என்று பார்த்தேன் நிச்சயமாக ஓடுகிறது மொபைலும் 2,35 என்றுதான் காட்டுகிறது. வெளியே எட்டிப் பார்த்தேன் நிச்சயமாக பெங்களூரேதான்!! வண்டி கிளம்பி கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஓடியிருக்கிறது இருப்பினும் பெங்களூரை தாண்டவேயில்லை. சகபயணிகள் அனைவரும் பயங்கரமாக தூங்கிக்கொண்டிருந்தனர். நீட்டி நிமிர்ந்து படுத்தால் தான் எனக்கு தூக்கம் வரும், எனவே பஸ் தூக்கமெல்லாம் அரைகுறைதான். சிலர் குறட்டைகூட விட்டுக்கொண்டிருந்தனர். கடும் குழப்பத்தில் டிரைவர் கேபின் சென்று கதவைத்தட்டினேன் (சற்று பலமாக தட்டியதில் நிச்சயம் டிரைவர் பயந்திருக்ககூடும்). டிரைவர் கூடவரும் ஆள் (கிளீனர்/2ம் டிரைவர்) கதவைத்திறந்தார். இருந்த கடுப்பில் நிச்சயம் அடித்திருப்பேன் தனியாக வந்திருந்தால்! கோபத்தை அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்
நான்: என்னங்க நடக்குது இங்கே? மணி ரெண்டே முக்காலாச்சு இன்னும் பெங்களூர் கூட தாண்டல!
டிரைவர்: சார் வண்டி பிரேக்-டவுன் ஆகிருச்சு.
நான்: பிரேக்-டவுனா?? வண்டி தான் எங்கயுமே நிக்கலையே?
டிரைவர்: ஒன்னும் பிரச்சனை இல்லை சார் எல்லாம் சரியாகிருச்சு
பேசிக்கொண்டிருக்கும் போதே வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி அடர்ந்த யூகலிப்டஸ் காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் புகுந்தது! இருந்த கோபமெல்லாம் பயமாக மாறியது, தனியாக வந்திருந்தாலும் எதையும் சந்திக்கலாம், தங்கைவேறு கூட இருக்கிறாளே!!
நான்: இப்ப எங்கயா போய்க்கிட்டிருக்கீங்க??
டிரைவர்: சார் எங்க வண்டி ஒன்று டீசல் இல்லாம மாட்டிக்கிச்சு அதுக்குதான் டீசல் வாங்க பெங்களூருக்குள் போயிருந்தோம்
நான்: ?????!!!!!!! (கடுமையான குழப்பம்)
எதற்காக அவர்கள், காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்?? அது என்ன வண்டி?? டீசல் வாங்குவதற்க்கு இத்தனை பேர் கொண்ட பஸ்ஸையா எடுத்துச் செல்வார்கள்?? இவர்களிடம் ஃபோன் இல்லையா?? ஆபீஸுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்காமல் ஏன் இப்படி ஊரை சுற்றுகிறார்கள்?? என ஏகப்பட்ட கேள்வி மனதுக்குள்!
எனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது இவர்களிடம் தமிழ்நாட்டிற்க்குள் நுழைவதற்க்கு அனுமதி இல்லை!! இது போல ஒரு பர்வீன் சம்பவம் பற்றி என் நண்பன் முன்பு கூறியிருந்தான்!
நான்: உங்களிடம் தமிழ் நாட்டுக்குள் நுழைய பெர்மிட் இல்லை என்றால் முன்னமே கூறியிருக்க வேண்டாமா?? வண்டியை பெங்களூருக்கு திருப்புங்கள் (உச்ச பட்ச டெசிபெல்லில் கத்தினேன், இந்த நிலையில் பெங்களூர் திரும்புவதுதான் பாதுகாப்பானது என்று தோன்றியது)
டிரைவர்: சார் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, இப்படியெல்லாம் பேசாதீங்க சார் (கிட்டத்தட்ட அழுதுவிடுவான் போல இருந்தது)
நான்: சரி மதுரைக்கு கொண்டு போய் சேக்குறாப்புல ஐடியாவாவது இருக்கா??
டிரைவர்: (மௌனம்)
நான் போட்ட கூச்சலில் முன் சீட்டி அமர்ந்திருந்த பயணி எழுந்து விட்டார், எங்கள் பேச்சை கேட்டுக்கெண்டிருந்தவர் நிலமை புறிந்ததும் சண்டையை அவர் தொடர்ந்தார். நான் சீட்டில் வந்து அமர்ந்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன்! எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது இந்த நடுக்காட்டுக்குள் வண்டியில் இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று!! சிறிது நேரத்தில் வண்டி திடீர் நிறுத்தத்திற்கு வந்தது. நின்ற இடம் நடுக்காடு!!!
இருக்கையிலிருந்து எழுந்து டிரைவர் கேபினுக்குள் நுழைந்தேன். எங்கள் பஸ்ஸுக்கு முன் வேறு ஒரு பஸ் நின்றிருந்தது. எங்களுக்கு முன் நின்றிருந்த வண்டி, எங்களுக்கு சற்று முன்னால் கிளம்பிய 9,00 மணி மதுரை வண்டி!! அதற்க்கும் முன்னால் ஒரு செக் போஸ்ட்!!!!!
அங்கே ஏற்கனவே பேய் முழி முழித்துக்கொண்டு ஒருவன் செக்போஸ்ட் அதிகாரி அருகில் கையைக்கட்டி நின்று கொண்டிருந்தான். 10 நிமிடம் ஏதேதோ பேசினார்கள், எங்கள் டிரைவர் கையில் இருந்து ஒரு சிறிய கவர் கைமாறியது. பேய் முழி முழித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் புண்ணகை, செக் போஸ்ட் ஆபீசருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு 9,00 மணி வண்டிக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்! எங்கள் டிரைவரும் வந்து வண்டியை கிளப்பினார். மணி 3,00 ஒரு வழியாக செக்போஸ்ட் தாண்டியாகிற்று! அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டேன்.
மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தேன், டிரைவரிடம் சண்டை போட்ட அந்த சக பயணி, தான் எழுந்து பார்த்த போது ஓசூர் மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் வண்டி நின்றிருந்ததாக கூறினார். அப்படியென்றால், அங்கிருந்து இந்த இரண்டு வண்டிகளும் திருப்பி கர்நாடகாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றன, இவர்கள் காட்டுக்குள் இருக்கும் செக்போஸ்ட் வழியாக தப்பிச்செல்ல முயன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றனர்! இதில் பின்னால் வந்த பஸ் திரும்பிச்சென்று பெங்களூரில் உள்ள ஆபீசில் பணத்தை பெற்றுக்கொண்டு, செக்போஸ்ட் ஆபிசர் ட்யூட்டி மாறியதும், லஞ்சத்தை கொடுத்து ஒரு பெரிய நாடகத்தையே நடத்தியிருக்கின்றனர்!!!
எப்படியோ ஒரு வழியாக ஒசூருக்குள் வந்து விட்டோம். வண்டி அங்கே ஒரு கடையில் நின்றது! சட்டென்று என் முன்னால் இருந்த பயணி எழுந்து, நேரம் பார்த்து, பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம் திரும்பி "ஏங்க! கரூர் வந்திருச்சுல்ல??" என்றார் அப்பாவியாக!! நான் சிரிப்பை அடக்கமுடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டேன். "இல்லை இன்னும் ஓசூரில் தான் இருக்கிறோம்" என்றேன் சிரிப்பினூடே. அவர் ஆச்சர்யமடையாமல், நிம்மதியடைந்தார் சட்டென்று பையை மேலே வைத்தார், இருக்கையில் அமர்ந்தார், தூங்கிப்போனார்!!!!
சிரித்து சிரித்து கோபம் குறைந்து மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை தூங்கிப்போனேன். எழுந்த போது மணி காலை 7,30 தங்கையை பார்த்தேன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சேலத்திலிருந்து ஒரு 35 கி.மீ தாண்டியிருந்தோம். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் அது நிகழ்ந்தது!
இது பர்வீன் டிராவல்ஸால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியை பற்றிய உண்மைக்கதை (கொஞ்சம் காமடியான கதை)! அந்த அப்பாவி வேற யாரும் இல்லைங்க நானே தான்!!
அது ஜூன் மாதம் 30, 2006; நானும் என் தங்கையும் பெங்களூரில் இருந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் பர்வீன் டிராவல்ஸில் டிக்கட் எடுத்திருந்தோம். டிக்கட்டில் பஸ் 9:40 PM க்கு மடிவாலாவில் பிக்கப் செய்யும் என எழுதியிருந்தது. நாங்கள் மடிவாலாவுக்கு 9:20 க்கு வந்து சேர்ந்தோம் (ஆனால் ரிப்போர்டிங் டைம் 9:00 என்று டிக்கட் சொல்லியது). பர்வீன் ஆபீசுக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தவரிடம் டிக்கட்டை காட்டினேன், அவன் அதை சற்றும் கண்டுகொள்ளாமல் "கொஞ்சம் பொறுங்கள் பஸ் வந்து கொண்டிருக்கிறது" என்றான். பக்கத்தில் ஒருவர் சென்னை டிக்கட்டை காண்பித்துக்கொண்டிருந்தார், அவருக்கும் இதே பதில்! அவன் டிக்கட்டை கூட பார்க்காமல் சொன்னதும் அவருக்கு ஆச்சர்யம், நிச்சயம் மூஞ்சியில் "இவர் 8,30 பஸ்ஸில் சென்னை போகிறார்" என்று எவனும் எழுதி ஒட்டிவிட்டானா என்று கண்ணாடியில் பார்த்திருப்பார். ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் பர்வீனில் பயணிக்கும் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று!
இருப்பினும் சில அப்பாவி பயணிகள் ஆபீஸ் முன் தங்கள் காத்திருத்தல் விளையாட்டை ஆரம்பித்தனர்!! நான் கடைக்கு சென்று தண்ணீர் வாங்கிக்கொண்டு என் தங்கை கொண்டு வந்த நூடுல்ஸை சாப்பிட ஆரம்பித்தேன். மீண்டும் பர்வீன் ஆபீசுக்கு 9,55க்கு வந்தோம், அங்கு ஒருவர் அந்த ஆபீஸ் அட்டன்டன்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தார், விவாதம் சூடாக இருக்கவே நின்று கேட்க தொடங்கினேன்...
பயணி: யோவ் என் பஸ் 9,00 மணிக்கு வரவேண்டியது
பணியாள்: இந்தா வந்துரும் சார்
பயணி: எப்போ??
பணியாள்: சார் உங்களுக்கு பெங்களூர் டிராஃபிக் பத்தி தெரியாதா என்ன?
பயணி: அப்ப என்ன எழவுக்குயா 8,30 க்கு வரனும்னு சொன்னீங்க??
(பாவம் இந்த அப்பாவி டிக்கட்டில் எழுதியிருக்கும் Reporting Time என்ற காமடியை சீரியஸாக எடுத்துக்கொண்டார் போலும்)
பணியாள்: (எக்கச்சக்கமான மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி) நான் பர்வீன்ல வேலை பாக்க வந்தேன் பாருங்க என்ன பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கனும்.
(சட்டென்று எழுந்து ஓட்டமும் நடையுமாக ஆபீஸுக்குள் நுழைந்து கொண்டார்)
மணி 9,58 ஒரு வழியாக 9 மணி பஸ் வந்து சேர்ந்தது, பின்னாலேயே 9,40 பஸ்!! உலக அதிசயம் VIII!!! நான் பஸ்சில் ஏறும் போது, கூட ஏறியவரின் டிக்கட்டை கவனித்தேன், அவரது டிக்கட்டில் பஸ் டைமிங் 9,30 என்று இருந்து கட்டணம் 400 ரூ-வாக இருந்தது. என் டிக்கட்டில் நேரம் 9,30 என்றும் கட்டணம் 500 ரூ என்றும் இருந்தது. எனக்கு அப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டது!! பின்பு தெரிந்து கொண்டேன் ஒரு ஒருவருக்கு ஒரு unique நேரமும் கட்டணமும் குறிக்கப்பட்டுள்ளது என்று. பஸ்ஸில் இட ஒதுக்கீட்டு குழப்பங்களுக்கும், அமளி துமளிக்கும் நடுவே ஒருவன் வந்து அனைவரிடமும் டிக்கட்டை வாங்கிக்கொண்டு போனான். அப்போது எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இது எப்பேர்பட்ட தந்திரம் என்பது!
பஸ் A/C செய்யப்பட்டிருந்தது, VOLVO பஸ்களை போல வெளியே உயரமாக இருந்தது இருப்பினும் இது VOLVO பஸ் இல்லை. உள்ளே மற்ற ஏர் பஸ்களை போல தாழ்வான இருக்கைகள் தான். இந்த பஸ்ஸெல்லாம் கவுந்தால் கவுத்துப்போட்ட ஆமை மாதிரி எந்திரிக்கவே முடியாது என்று தோண்றியது.
பஸ்சில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு அழகான 6 இன்ச் LCD டீவி இருந்தது (விமானத்தில் இருப்பதைப்போல!). அந்த வினாடியில் என் வாழக்கையில் பார்த்த சிறந்த பஸ் எது என்று கேட்டால் இந்த பஸ்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லியிருப்பேன்! ஒரு சக பயணி ஆர்வ மிகுதியால் ஏன்பா "இந்த டீவியை கொஞ்சம் போடுங்கப்பா" என்றார். டிரைவர் "சார் டீவியை போட்டா ஏசி ஓடாது" என்றதும் கடுப்பாகி அந்த பயணி "அப்ப பேசாம இஞ்சின நிருத்திருயா" என்றார். சிறிது நேரத்தில் பஸ் கிளம்பி ஓட ஆரம்பித்தது... நானும் முந்தய இரவில் ஆபீஸில் கண்முழித்து வேளை பார்த்த அசதியில் தூங்கிப்போனேன். பஸ் நிற்காமல் ஒடிக்கொண்டே இருந்ததை உணரமுடிந்தது.
மறுநாள் காலை 2,30 க்கு வண்டி ஒரு இடத்தில் நின்றிருந்தது. என்ன நடக்கிறது என்று கீழே இறங்கிப்பார்தேன். அங்கே டிரைவர் ஒரு பெரிய கேன் எடுத்து டீசல் வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக வண்டி சேலத்தை தாண்டிவிட்டது என நினைத்து சந்தோஷப்பட்டேன். மீண்டும் பஸ் கிளம்பியது நானும் வண்டியில் ஏறினேன். என் தங்கை தூக்கம் கலைந்து "எங்கணே இருக்கோம்" என்று கேட்டாள் நானும் சிரத்தையாக "சேலத்தை தாண்டி வந்துட்டோம்னு நினைக்கிறேன்" என்றேன். பிறகு இருக்கையில் அமர்ந்ததும் மொபைலை எடுத்து ஏரியா பார்த்த போது "Electronics City" என்று காட்டியது!!!! நாங்கள் இன்னும் பெங்களூரில்தான் இருந்தோம்!!!
சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றும் ஒரு நண்பரிடம் இருந்து கசிந்த ஸ்கிரிப்ட் மற்றும் கதையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...
இந்த படத்தில் ரஜினி மூண்று வேடத்தில் நடிக்கிறார். மூண்று வேடத்தில் ரஜினி முன்பு தோன்றிய "மூண்று முகம்" படம் பிண்னி பெடலெடுத்ததால் சென்டிமென்டலாக இதை ரஜினியே முடிவு செய்ததாக பட்சிகள் கூறுகின்றன.
அமேரிக்காவில் உள்ள ஒரு பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ஒரு மனிதர் உரையாற்றிக்கொண்டிருக்கிறார் [எந்த மொழியில் என்றெல்லாம் அபத்தமாக கேள்வி கேட்க கூடாது, தமிழில் தான்!] அவரது முகம் வெகு அருகில் காட்டப்படும்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வரும் தோட்டா அவரது நெற்றிப்பொட்டில் பட்டு மூளையை சிதறடிக்கிறுது. மக்கள் பீதியில் அங்குமிங்கும் ஓட பதட்டம் பற்றிக்கொள்கிறது.
இரண்டு நாட்களுக்கு பிறகு, அதிகாலை 7:30, Pentagon அலுவலகத்தில், நிறைய பெரும் புள்ளிகள் ஒரு நீள்வட்ட மேஜையை ஆக்ரமித்திருந்தனர். ஒரு பெரிய ஆபீசர் மிகுந்த கோபத்தில் "அமேரிக்காவின் டிபன்ஸ் மினிஸ்டர் கொல்லப்பட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் கேஸில் எந்த முன்னேற்றமும் இல்லை!". "சார் கொலைகாரன் எந்த தடையத்தையும் விட்டுவைக்கவில்லை" என்கிறார் ஒரு ஆபீசர். ["அடுத்ததா கொலை பண்ணுறப்போ வீட்டு அட்ரஸ் எழுதிவைக்கச் சொல்லுறேன்" அப்டீனு எகத்தாளம் பேசக்கூடாது]. சரி இப்போ என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசிக்கும் போது. ஒரு ஆபீசர் எழுந்து... "இந்த அமேரிக்காவுலயே, ஏன் இந்த ஒலகத்துலயே இந்த கேசை முடிக்கக்கூடிய தெறம ஹரிக்குதான் இருக்கு...".
வேறு ஒரு இடத்தில் (குறைந்த வெளிச்சமுள்ள ஒரு அறை) கைப்பேசியின் அழைப்புமணி ஒலிக்கிறது. இருட்டிலிருந்து ஒரு கைநீண்டு கைப்பேசியை எடுத்து காதில் வைத்து (முகம் பாதி இட்டில் சரியாக தெரியாது).
முகம் தெரியாத மனிதன்: "ஹலோ"
எதிர் முனை: "மிஸ்டர் ஹரி?"
மு.தெ.ம: "என்ன விஷயம்?"
எ.மு: "அது ஹரியிடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும்"
(மு.தெ.ம திரைச்சீலையை விலக்க அது ஒரு சாதாரண அல்லக்கை என ஆடியன்ஸுக்கு தெரியவருகிறது)
அல்லக்கை: "இன்னிக்கு என்ன தேதி?"
எ.மு: "பிப்ரவரி 14"
அல்லக்கை: "அப்ப அண்ணன் ஐஸ்வர்யாகூட நயாகரால குளிச்சு, குத்தாட்டம் போட்டுக்கிட்டிருப்பார்!!!"
"அதான்டா... இதான்டா... ஜஸ் ஜோடி நான்தான்டா..." என்று பாடலுடன் ரஜினி அறிமுகமாகிறார். ஷங்கர், படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக ரஜினியின் சோலோ இன்ட்ரோவை தவிர்த்து "ஐஸ்ஷு"டன் ஜோடியாக ஒரு குத்துப்பாட்டில் இன்ட்ரடியூஸ் செய்கிறார். பாடல் முடிந்ததும் சைரன் ஒலிக்க FBI வாகனங்கள் வந்து ரஜினியை சூழ்ந்து விடுகின்றன. மிஸ்டர். "ஹரி தங்கள் உதவி இப்போது எங்கள் FBI-க்கு தேவைப்படுகிறது" என்கிறார் தலைமை ஆபீசர். "நான் ஒரு சாதாரன ப்ரைவேட் டிடெக்டிவ், என் உதவி உங்களுக்கு எதுக்குசார்?" என்று ஹரிகேட்க, பின்னால் நிக்கும் அல்லக்கை ஆபீசர் (விவேக்???) "ஹரி, பெயரைக்கேட்டாலே குத்தவாலிக்கு புடிக்கும் சொறி!, அவரு குத்தவாலிக்கு வெக்குறது பொறி!, அப்படீனு எல்லோருக்கும் தெரியுமே சார்" என்று பஞ்ச் விடுகிறார். [இப்பவெல்லாம் அல்லக்கையை விட்டு பஞ்ச் விடுறதுதான் ஷங்கர் ஃபேசன்].
ஹரிக்கு நிலமை விவரிக்கப்படுகிறது [இடம், பொருள் எல்லாம் உங்களுக்கு எதுக்கு?]. ஹரி, விவேக் டிபன்ஸ் மினிஸ்டர் வீட்டில் ஆராயும்போது ஒரு லெட்டரை கண்டெடுக்கிறார் ஹரி. அந்த லெட்டரில் "முடிச்சிர்றேன்... உன்னை 12ந் தேதி முடிச்சிர்றேன்..." என்ற ஒற்றை வரிமட்டும் எழுதியிருந்தது. மறுநாள் செய்தித்தாளில் தமிழ்நாடு முக்கிய மந்திரிக்கு "முடிச்சிர்றேன்... 18ந் தேதி முடிச்சிர்றேன்..." என வந்த மிரட்டல் கடிதம் பற்றிய செய்தியை அறிந்து ரஜினி, ஐஸ், விவேக் சென்னை விரைகிறார்கள். ஐஸ் விமானத்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கும் ரஜினியை பார்க்கிறார். [கணவுல சுச்சர்லாந்து போய், ஒரு டூயட் பாடுனாங்கன்னு சொல்லனுமா என்ன?]
ஹரி, இன்னும் ஒரு கொலையை தடுக்க பல வியூகங்களை அமைக்கிறார். ஹரி, கொலை வெறிதனமான சேசிங்கில் ஒரு சர்வதேச தீவிரவாதி இதன் பின்னனியில் இருப்பதை போலீசுக்கு தெரியவைக்கிறார். போலீஸ் அந்த தீவிரவாதியை சுற்றி வளைக்கிறது. முகத்தை மறைத்த ஒருவர் ரகசியமாக ஒரு இடத்திற்கு செல்கிறார். முகத்திரையை விலக்கி அந்த இடத்தில் நுழைகிறார் ஹரி!! அங்கு அவர் வீல் சேரில் உட்கார்ந்து ஒரு கணிப்பொறியில் கவனமாயிருக்கும் ஒருவரை (இன்னும் நமக்கு முகத்தை காட்டவில்லை) சந்திக்கிறார். அவர் அருகில் சென்று தரையில் அமருகிறார். அவர் தலையை கோதிவிட்டபடி வீல் சேர் உருவம் திரும்ப.... இன்னொரு ரஜினி!!!! தரையில் அமர்ந்திருக்கும் ரஜினியின் தலையிலிருந்து கையை எடுக்காமல், வீல் சேர் ரஜினி கண்கள் மூடுகிறார் (அட கொசுவத்தி சுத்துறதுக்குதான்பா...)
[ஃப்ளாஷ் பேக் விரிகிறது]
NASA-வினி தலைமை விஞ்ஞானியாக வேலை பார்க்கும் ரஜினி(வேடம்-I)-யின் மகன் ஹரி(ரஜினி-II) கால் ஊனத்தால் நடக்கமுடியாமல் தவிக்கிறார். மகன்படும் வேதனையை கண்ட ரஜினி-I தானாக சிந்திக்கும் திறன் கெண்ட ஒரு இயந்திர மனிதனை(ரஜினி-III) உருவாக்கி மகனுக்கு உதவிசெய்ய வைக்கிறார். ஒரு நாள் மகன் ரஜினிக்கு ஃபோன் வருகிறது, "நான் நாசாவின் கட்டுப்பாட்டு அதிகாரி பேசுகிறேன், தங்கள் தந்தை NASA-LAB-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார்", என்று. அழுது புலம்பும் மகன் ரஜினி தந்தை உடலை பெருவதற்காக ரோபோ ரஜினியுடன், NASA செல்கிறார். அப்போது தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம்வர ரோபோ ரஜினியின் உதவியுடன் நாசா கண்கானிப்பு கேமாராவை ஹேக் செய்து. ஒரு அதிகாரி விபத்தை செட்டப்செய்து அதில் தன் தந்தையை சிக்கவைப்பதை அறிந்து கொதிக்கிறார். ரோபோ ரஜினியை பயன்படுத்தி கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கிறார். நாசாவின் ரகசியங்களை தீவிரவாதிகளுக்கு விற்க ஒரு உயர் அதிகாரி போடும் திட்டம் ரஜினி-I க்கு தெரிந்து விடுகிறது. அதனால் அந்த அதிகாரி ரஜினி-I ஐ கொண்று விடுகிறார். இதற்கெல்லாம் மூலகாரணமான முக்கியபுள்ளிகளின் பட்டியலை மகன் ரஜினி திரட்டுகிறார். அனைத்து தகவல்களோடு இந்தியா பறக்கிறார். அங்கிருந்தவாறு ரோபோ ரஜினியை இயக்கி பட்டியலில் இருக்கும் பெரும் புள்ளிகளை யாருக்கும் தெரியாமல் முடிக்கிறார்.
[ஃப்ளாஷ் பேக் முடிந்தது]
ரஜினியின் கணிப்பொறியில் உள்ள பட்டியலில் சிவப்பு கோடிடப்படாத ஒரே பெயர் அந்த "தமிழ்நாடு முக்கிய மந்திரி"! 18-ந் தேதி பலத்த பாதுகாப்புக்கு இடையே நடக்கும் பேரணியில் அந்த முக்கிய மந்திரி சுடப்படுகிறார். போலீஸ் ஒரு முகமூடி அணிந்த மனிதனை துரத்துகிறது துரத்தலின் போது ஒரு பர்ஸை தவரவிடுகிறான் அந்த முகமூடி மனிதன்! போலீஸுடனான மோதலில் அந்த முகமூடி மனிதன் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்து கூவத்தில் விழுந்து நொறுங்குகிறது. இதை கணினியில் பார்த்துக்கொண்டிருக்கும் வீல் சேர் ரஜினி கண்கள் கசிகிறார்!! அவரது கணினி "No Signal" என்று காட்டுகிறது. கைப்பற்றிய பர்ஸ்ஸில் உள்ள முகவரிக்கு விரைகிறது போலீஸ், அங்கு கிடைக்கும் ஆதாரங்களை FBI பெற்றுக்கொண்டு, அமேரிக்காவில் பதுங்கியிருக்கும் தீவிரவாதியை (நாசாவின் கண்கானிப்பு கேமராவில் பார்த்த அதே ஆள் என்று சொல்ல வேண்டுமா?) சுற்றி வளைக்கிறது!! இருட்டில் அமர்ந்திருக்கும் வீல் சேர் ரஜினியின் அறைகதவு தட்டப்படுகிறது!! கதவுக்கு வெளியில் அரைகுறை தோலுடனும், இரும்பு கரங்களுடனும் நிற்க்கும் ரோபோ ரஜினியின் க்ளோசப் காட்டப்பட்டு.... நன்றி வணக்கம் சொல்லப்படுகிறது!!!
--------------------------------------------------
கருப்பன்: (பக்கத்திலிருப்பவரிடம்) "யாருப்பா அது தூரத்துல எதையோ ஆட்டோவுல லோடு பண்ணுறது"
பக்கத்திலிருப்பவர்: யாரோ முரட்டு பசங்களா தெரியுது!!
கருப்பன்: ஏய், அவங்க லோடு பண்ணுறது உருட்டுக்கட்டை மாதிரியில தெரியுது
பக்கத்திலிருப்பவர்: மாதிரியெல்லாம் எல்லாம் இல்ல எல்லாம் ஒரிஜினல்
கருப்பன்: என்னப்பா நம்பள நோக்கி வருது??!!!
பக்த்திலிருப்பவர்: நம்பள நோக்கியில்லை, உன்னை நோக்கி வருது
கருப்பன்: ஐய்யய்யோ நான் கதையை லீக் பண்ணுன மேட்டரு ஷங்கருக்கு சிக்கிருச்சுபோல.... குதிச்சிருடா.... குதிச்சிருடா... கருப்பாஆஆஆஆஆஆஆ...........
தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அம்மா பஞ்சமில்லாமல் அறிக்கை வாசித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே! சமீபகாலமாக அம்மாவிடம் அறிக்கைப்பஞ்சம் தலைவிரித்தாடுவது கண்கூடாக தெரிகிறது. எ.டு: இராமேஸ்வரத்தில் மாடுகள் இறந்து விட்டமையால் கலைஞர் பதவி விலகவேண்டும்... முதலில் படித்தவுடன் "என்ன கொடும சார் இது" என்று நொந்து கொண்டேன். உடனே எனது சிந்தனை குதிரையை தட்டிவிட்டு அம்மாவுக்கு அறிக்கைவிட உதவுவதற்காக ஒரு கையேட்டை தயாரிக்கும் முயர்ச்சியின் விளைவுதான் இந்த பதிவு...
பின்வரும் பட்டியலுக்கு தாங்களும் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
1. மக்களுக்கு என தேக்கிவைத்திருக்கும் ஏரித்தண்ணீரை "சூரியன்" உறுஞ்சிவிடுவதால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
2. கலைஞர் தொலைக்காட்சியில் வரும் நெடுந் தொடர்கள், மனைவிகளை கணவருக்கு அன்னமிடாமல் தடுக்கிறது. இது தான் தமிழகத்தில் பட்டினி சாவுக்கு காரணம்.
3. இலவச கேஸ் அடுப்புகளில் உள்ள ஓட்டைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து ஓசோன் படலத்தில் ஓட்டையைப் போடுகிறது.
4. திமுக ஆட்சியில் சத்துணவில் போடப்படும் முட்டைகள் சத்தாக இல்லாததனால்தான் மாணவர்கள், கணக்கிலும் அறிவியலிலும் முட்டை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.
5. மஞ்சள் காமாலை நோய் மக்களுக்கு வருவதற்கு காரணமே கருணாநிதி மஞ்சள் துண்டு போடுவதுதான்.
பட்டியல் தொடரும்...
