சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?

IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே பார்ப்பதும் உண்டு. இப்போது மத்திய பிரதேச மாநில அரசு அதற்கும் அடித்துவிட்டது ஆப்பு. IPL போட்டிகளில் ம.பி அரசு Cheerleaders-களை தடை செய்துள்ளது (ம.பியில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டுமே என நினைக்கிறேன்). "பெண்களை தெய்வமாக சித்தரிக்கும் எங்கள் நாட்டில், இது போன்ற அரை நிர்வானமாக பெண்களை விளம்பரங்களுக்கு பயண்படுத்துவதை தடை செய்கிறோம்" என மும்பை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் "கிரிகெட் வீளையாட்டில் Cheerleaders பயண்படுத்துவது கலாச்சாரத்துக்கு எந்த விதத்தில் கேடு விளைவிக்கிறது? இது எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் (அட்ரா சக்கை... அட்ரா சக்கை...)

இந்திய "கிரிகெட் ரசிகர்கள்"(?) பல Cheerleader's இடம் அத்துமீறி நடந்துகொண்டதும், ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசும் செயல்களில் இரங்கியும் உள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த Cheerleader "ரசிகர்கள் மிகக்கடுமையான ஆபாச வார்த்தைகளை வீசுவதோடு, physical harassmentடிலும் ஈடுபடுகின்றனர்" என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

நம்மூர் ரசிகனுக செய்யுற சேட்டையில நானே Cheerleaders வேண்டாம்னு சொன்னாலும் ஆச்சயர்யபடுவதற்கில்லை!!!

மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல மேலும் பல இடங்களில் Cheerleaders சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். எல்லை தாண்டும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என ஒரு குரூப் கொலை வெறியுடன் களமிறங்கியிருப்பதாக கேள்வி!!

இன்னும் Cheerleaders எல்லைக்குள்ளயே வரல அப்புறம் எங்கயா மீறுச்சுனு கேக்குறவங்க, ஒரு மாநாட்டை கூட்டுங்க...(மறக்காம எனக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கப்பா! :-D)

இன்று அலுவலகத்துக்குள் நுழைந்த உடன் கண்ணில் பட்ட விஷயம், என் தோழியின் புடவை கெட்டப். சரி காலையில் சீக்கிரம் எழுந்திருச்சிருப்பாள் என்று எண்ணிக்கொண்டு வேலையில் மூழ்கிப்போனேன். மதியம் உணவு வேளையில் தான் கவனித்தேன் கிட்டத்தட்ட அனைத்து பெண்களும் சேலையில் தான் வந்திருந்தனர். மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்த போது அவளே வந்து கேட்டுவிட்டாள் "ஒரு Women's day வாழ்த்து சொன்னா குறைந்தா போய்விடுவாய் " என்று! நாளைக்கு தான மகளிர் தினம் என்று கேட்டேன். நாளை விடுமுறை என்பதால் இன்றே கொண்டாடுகிறார்களாம். ஏகப்பட்ட இனிப்பு, பரிசுப்பொருட்கள் என ஆபீசையே அமர்களபடுத்திவிட்டனர். ஆண்கள் யாரையும் வேடிக்கைகூட பார்க்க அனுமதிக்கவில்லை! போகிற போக்கைப்பார்த்தால் கூடிய விரைவில் ஆண்கள் 10% இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன்!!





வலையுலக தோழிகளே, சண்டை போடாமல் ஆளுக்கு ஒரு ரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் அனைவருக்கும் எங்கள்(வருத்தப்படாத சிறுவர்கள், வாலிபர்கள் & கிழவர்கள் சங்கம்) சார்பாக

மகளிர் தின வாழ்த்துக்கள்!!

தமிழில் பொதுவாக பெண்களை குறிப்பிடும் போது மென்மையானவர்கள், பூப்போன்றவர்கள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட நேர்மாறாக குறிப்பிடுகின்றனர் ஆண்களை "Cool Guys" என்றும் பெண்களை "Hot Girls" என்றும் கூறுகின்றனர். தமிழில் நெருப்பு என்று ஆண்களையும் பஞ்சு என பெண்களையும் குறிப்பிடுகின்றனர்.

இது மட்டுமல்ல நாமெல்லாம் கங்கா, யமுனா, காவேரி என ஆறுகளுக்கு பெயர் வைக்கிறோம் ஆனால் ஆங்கிலத்திலோ கத்ரீனா, ரீட்டா என புயலுக்கும், சூராவளிக்கும் பெயர் வைக்கின்றனர். இந்த முரண்பாடு ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சற்று விளக்குங்களேன்.