முதலில் நான் கடிகாரத்தை, ஓடுகிறதா என்று பார்த்தேன் நிச்சயமாக ஓடுகிறது மொபைலும் 2,35 என்றுதான் காட்டுகிறது. வெளியே எட்டிப் பார்த்தேன் நிச்சயமாக பெங்களூரேதான்!! வண்டி கிளம்பி கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஓடியிருக்கிறது இருப்பினும் பெங்களூரை தாண்டவேயில்லை. சகபயணிகள் அனைவரும் பயங்கரமாக தூங்கிக்கொண்டிருந்தனர். நீட்டி நிமிர்ந்து படுத்தால் தான் எனக்கு தூக்கம் வரும், எனவே பஸ் தூக்கமெல்லாம் அரைகுறைதான். சிலர் குறட்டைகூட விட்டுக்கொண்டிருந்தனர். கடும் குழப்பத்தில் டிரைவர் கேபின் சென்று கதவைத்தட்டினேன் (சற்று பலமாக தட்டியதில் நிச்சயம் டிரைவர் பயந்திருக்ககூடும்). டிரைவர் கூடவரும் ஆள் (கிளீனர்/2ம் டிரைவர்) கதவைத்திறந்தார். இருந்த கடுப்பில் நிச்சயம் அடித்திருப்பேன் தனியாக வந்திருந்தால்! கோபத்தை அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தேன்

நான்: என்னங்க நடக்குது இங்கே? மணி ரெண்டே முக்காலாச்சு இன்னும் பெங்களூர் கூட தாண்டல!
டிரைவர்: சார் வண்டி பிரேக்-டவுன் ஆகிருச்சு.
நான்: பிரேக்-டவுனா?? வண்டி தான் எங்கயுமே நிக்கலையே?
டிரைவர்: ஒன்னும் பிரச்சனை இல்லை சார் எல்லாம் சரியாகிருச்சு

பேசிக்கொண்டிருக்கும் போதே வண்டி மெயின் ரோட்டிலிருந்து விலகி அடர்ந்த யூகலிப்டஸ் காட்டுக்குள் செல்லும் ஒற்றையடிப்பாதையில் புகுந்தது! இருந்த கோபமெல்லாம் பயமாக மாறியது, தனியாக வந்திருந்தாலும் எதையும் சந்திக்கலாம், தங்கைவேறு கூட இருக்கிறாளே!!

நான்: இப்ப எங்கயா போய்க்கிட்டிருக்கீங்க??
டிரைவர்: சார் எங்க வண்டி ஒன்று டீசல் இல்லாம மாட்டிக்கிச்சு அதுக்குதான் டீசல் வாங்க பெங்களூருக்குள் போயிருந்தோம்
நான்: ?????!!!!!!! (கடுமையான குழப்பம்)

எதற்காக அவர்கள், காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்?? அது என்ன வண்டி?? டீசல் வாங்குவதற்க்கு இத்தனை பேர் கொண்ட பஸ்ஸையா எடுத்துச் செல்வார்கள்?? இவர்களிடம் ஃபோன் இல்லையா?? ஆபீஸுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்காமல் ஏன் இப்படி ஊரை சுற்றுகிறார்கள்?? என ஏகப்பட்ட கேள்வி மனதுக்குள்!
எனக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது இவர்களிடம் தமிழ்நாட்டிற்க்குள் நுழைவதற்க்கு அனுமதி இல்லை!! இது போல ஒரு பர்வீன் சம்பவம் பற்றி என் நண்பன் முன்பு கூறியிருந்தான்!

நான்: உங்களிடம் தமிழ் நாட்டுக்குள் நுழைய பெர்மிட் இல்லை என்றால் முன்னமே கூறியிருக்க வேண்டாமா?? வண்டியை பெங்களூருக்கு திருப்புங்கள் (உச்ச பட்ச டெசிபெல்லில் கத்தினேன், இந்த நிலையில் பெங்களூர் திரும்புவதுதான் பாதுகாப்பானது என்று தோன்றியது)
டிரைவர்: சார் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, இப்படியெல்லாம் பேசாதீங்க சார் (கிட்டத்தட்ட அழுதுவிடுவான் போல இருந்தது)
நான்: சரி மதுரைக்கு கொண்டு போய் சேக்குறாப்புல ஐடியாவாவது இருக்கா??
டிரைவர்: (மௌனம்)

நான் போட்ட கூச்சலில் முன் சீட்டி அமர்ந்திருந்த பயணி எழுந்து விட்டார், எங்கள் பேச்சை கேட்டுக்கெண்டிருந்தவர் நிலமை புறிந்ததும் சண்டையை அவர் தொடர்ந்தார். நான் சீட்டில் வந்து அமர்ந்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தேன்! எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது இந்த நடுக்காட்டுக்குள் வண்டியில் இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று!! சிறிது நேரத்தில் வண்டி திடீர் நிறுத்தத்திற்கு வந்தது. நின்ற இடம் நடுக்காடு!!!

இருக்கையிலிருந்து எழுந்து டிரைவர் கேபினுக்குள் நுழைந்தேன். எங்கள் பஸ்ஸுக்கு முன் வேறு ஒரு பஸ் நின்றிருந்தது. எங்களுக்கு முன் நின்றிருந்த வண்டி, எங்களுக்கு சற்று முன்னால் கிளம்பிய 9,00 மணி மதுரை வண்டி!! அதற்க்கும் முன்னால் ஒரு செக் போஸ்ட்!!!!!

அங்கே ஏற்கனவே பேய் முழி முழித்துக்கொண்டு ஒருவன் செக்போஸ்ட் அதிகாரி அருகில் கையைக்கட்டி நின்று கொண்டிருந்தான். 10 நிமிடம் ஏதேதோ பேசினார்கள், எங்கள் டிரைவர் கையில் இருந்து ஒரு சிறிய கவர் கைமாறியது. பேய் முழி முழித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் புண்ணகை, செக் போஸ்ட் ஆபீசருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு 9,00 மணி வண்டிக்குள் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான்! எங்கள் டிரைவரும் வந்து வண்டியை கிளப்பினார். மணி 3,00 ஒரு வழியாக செக்போஸ்ட் தாண்டியாகிற்று! அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டேன்.

மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தேன், டிரைவரிடம் சண்டை போட்ட அந்த சக பயணி, தான் எழுந்து பார்த்த போது ஓசூர் மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் வண்டி நின்றிருந்ததாக கூறினார். அப்படியென்றால், அங்கிருந்து இந்த இரண்டு வண்டிகளும் திருப்பி கர்நாடகாவுக்குள் அனுப்பப்பட்டிருக்கின்றன, இவர்கள் காட்டுக்குள் இருக்கும் செக்போஸ்ட் வழியாக தப்பிச்செல்ல முயன்று கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றனர்! இதில் பின்னால் வந்த பஸ் திரும்பிச்சென்று பெங்களூரில் உள்ள ஆபீசில் பணத்தை பெற்றுக்கொண்டு, செக்போஸ்ட் ஆபிசர் ட்யூட்டி மாறியதும், லஞ்சத்தை கொடுத்து ஒரு பெரிய நாடகத்தையே நடத்தியிருக்கின்றனர்!!!

எப்படியோ ஒரு வழியாக ஒசூருக்குள் வந்து விட்டோம். வண்டி அங்கே ஒரு கடையில் நின்றது! சட்டென்று என் முன்னால் இருந்த பயணி எழுந்து, நேரம் பார்த்து, பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை என்னிடம் திரும்பி "ஏங்க! கரூர் வந்திருச்சுல்ல??" என்றார் அப்பாவியாக!! நான் சிரிப்பை அடக்கமுடியாமல் பயங்கரமாக சிரித்துவிட்டேன். "இல்லை இன்னும் ஓசூரில் தான் இருக்கிறோம்" என்றேன் சிரிப்பினூடே. அவர் ஆச்சர்யமடையாமல், நிம்மதியடைந்தார் சட்டென்று பையை மேலே வைத்தார், இருக்கையில் அமர்ந்தார், தூங்கிப்போனார்!!!!

சிரித்து சிரித்து கோபம் குறைந்து மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது. எப்படித்தூங்கினேன் என்று தெரியவில்லை தூங்கிப்போனேன். எழுந்த போது மணி காலை 7,30 தங்கையை பார்த்தேன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சேலத்திலிருந்து ஒரு 35 கி.மீ தாண்டியிருந்தோம். சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த போதுதான் அது நிகழ்ந்தது!

1 மறுமொழிகள்:

Anonymous said...

Good words.