நேற்று வீட்டுக்கு ஃபோன் பண்ணி என் தம்பியிடம் பேசினேன், அம்மா எங்கேடா என்று கேட்ட போது, வீடு, குத்துவிளக்கு, பூஜை ஐட்டங்களை சுத்தம் செய்து கொண்டிருப்பதாக சொன்னான். என்னடா விசேஷம் என்று கேட்டேன். அதான் வருசம் பொறக்குதுல்ல என்றான். அடப்பாவி, அதான் தமிழ்நாட்டு கவர்மென்ட் தையில் தான் புத்தாண்டுனு சொல்லிருச்சுல்ல, என்றேன். அடப் போடா பைத்தியக்காரா, நடுவூர்ல பாதி பயபுள்ளைக்கு தமிழ்நாட்டுக்கு கவர்மென்ட் இருக்குறதே தெரியாது இதுல ஆணை வேறயா, என்றான்.
அப்போது தான் உறைத்தது தமிழக அரசாணை தமிழகத்துக்கு மட்டும் தானே, என்னைப்போல NRT (Non-Resident Tamils) க்கு அது பொருந்துமா?? பொருந்துதோ இல்லையோ எங்கள் வீட்டில் தமிழ்புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். டீவிகளில் என்னவென்றால் சித்திரையை முன்னிட்டு(?) என்று வழக்கம் போல "உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கே வராத..." என்று முழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆஹா தமிழக அரசாணையை டீவிகளும் மீடியாக்களும் மதிக்கும் விதம் சும்மா புல்லறிக்க வைக்குது. "புத்தாண்டு" என்ற வார்த்தைக்கு மட்டும் தமிழக அரசு தடைவித்திருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோண்றுகிறது!
எனவே இவ்வாறு Intertiaவிலிருந்து மீளாதவர்களுக்கும்(என் பெற்றோர் போல), தமிழக அரசாணை செல்லுபடியாக இடங்களில் வாழ்பவர்களுக்கும் (என் போல), தமிழக அரசாணை பற்றி அறியாதவர்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பி.கு: தி.மு கழக உடன்பிறப்புகள் கொதித்து எழ வேண்டாம், இந்த வாழ்த்துகள் தங்களுக்கானதல்ல!
Subscribe to:
Posts (Atom)
பெயர் விளக்கம்
தத்துவம்
பகல்ல பசுமாடு தெரியாதவனுக்கு, இருட்டுல எருமை மாடா தெரியப்போகுது!
