சிறு வயதில் தட்டான் பிடிப்பது (உயிரோடு) என்பது ஒரு கலை. அது எனக்கு கைவந்த கலையாக இருந்தது. சமீபத்தில் எங்கள் வயலுக்கு சென்றிருந்த போது, இன்னும் எனக்கு அந்த திறமை இருக்கிறதா என சோதித்து பார்க்க விரும்பினேன்... மெதுவாக அமர்ந்து ஒரு தட்டானை நோக்கி கையை வீசினேன், அழகாக கைக்குள் சிக்கிக்கொண்டது! லேசாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன்.

தட்டானை கையில் எடுத்தபோதுதான் அதை பார்த்தேன்! தட்டானுக்கு சட்டைபோட்டால் எப்படியிருக்கும் என்று தெரியாது ஆனாலும் தட்டான் முட்டைபோட்டால் எப்படியிருக்கும் என மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக எடுத்தேன் மொபைலை கிளிக்கினேன் இந்த படத்தை!! (பெரிதாக காட்ட படத்தின் மீது சொடுக்கவும்)



பி.கு: யாரும் தயவு செய்து புளூகிராஸில் சொல்லிவிடாதீர்கள் (என் கிரகம் பிடிபட்ட தட்டானும் ப்ளூ கலரில் இருக்கிறது!)