நான் இந்த சுட்டியில் உள்ள கதையை படித்தேன். இதிலிருக்கும் தகவல்கள் புதிதாக கடன் அட்டை உபயோகிக்கும் மக்கள் மனதில் புளியைக்கறைக்கும்... ஆனால் கடனட்டையில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை... என் கடனட்டை உபயோக அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட சில தகவல்கள் இதோ...

1. கடனட்டை எண்கள், கதையில் குறிப்பிட்டுள்ளது போல, அடுத்தடுத்த எண்களாக இருக்காது. இந்த எண்கள், ஒரு குறிப்பிட்ட (CRC) எண் கூட்டுத்தொகை மூலமாக உருவாக்கப்படுகிறது. ஆகையால், தவறுதலாக எழுதப்படும் எண் இன்னொருவரின் எண்ணாக இருப்பதற்கு மிக மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளது (கிட்டத்தட்ட இவ்வாறு நடக்காது என்றே கூறலாம்).

2. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலைகள் கிராஸ்ட் (Crossed/Account Payee) காசோலைகளாக இருக்க வேண்டும் இல்லையேல் காசோலை நிராகரிக்கப்படும்.

3. கிராஸ்ட் காசோலைகள் மூலம் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கணக்குக்கு மட்டுமே மாற்ற இயலும். அதை காசாளரிடம் (cashier) கொடுத்து பணமாக பெற இயலாது.

4. சேமிப்பு கணக்கிலிருந்து காசோலை மூலமாக வேறு கணக்கிற்கு மாற்றப்படும் பணம் சம்பத்தப்பட்ட விவரம், சேமிப்பு வங்கிக்கணக்கு ரெக்கார்டுகளிள் இருக்கும். இந்த ரெக்கார்டுகளை, சேமிப்பு கணக்கின் உரிமையாளர், எந்த நேரத்திலும் தொலைபேசி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, வேறுசில வழிகள் மூலமாகவோ வங்கியிலிருந்து பெற இயலும்.

5. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலையின் கணக்கு, அந்த கடனட்டை உரிமையாளரின் பெயரில் இருத்தல் அவசியம். உதாரணமாக KARUPPAN என்ற பெயரில் உள்ள கடன் அட்டைக்கு, UNKNOWN என்ற பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து செழுத்த இயலாது.

எனவே சுப்பிரமணியம் எண்களை தவறாக எழுதி, அந்த தவறான எண் வேறு ஒருவருடயதாக இருப்பதும், அந்த ஒருவரின் பெயரும் சுப்பிரமணியம் என்று இருப்பதும் இயலாத ஒன்று.


வங்கியில் பணிபுரியும் நன்பர்கள் தயவு செய்து தகவல்கள் சரியானவையா என்று தெரிவிக்கவும்.