கணினியில் Top Ranking விளையாட்டுகளுள் ஒன்றான GTA (Grand Theft Auto)வின் நான்காவது வெர்ஷனை இன்று Rock Star Games நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று Microsoft's xbox, Sony Playstation 3 இரண்டுக்குமான வெர்ஷன்கள் மட்டும் வெளியிட்டுள்ளது. இன்னும் PC வெர்ஷன் வெளியிடப்போகும் தேதி குறிப்பிடபடவில்லை.
GTA விளையாட்டுகள் முற்றிலும் 3-டி விளையாட்டு, நேர்த்தியான வடிவமைப்பும் விளையாட்டு யுக்திகளும் இந்த விளையாட்டை கணினி விளையாட்டுளின் ராஜாவாக மக்கள் கருத காரணமாயிருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். கேம் ஸ்பாட்டில் 10/10 ரேட்டிங் வாங்கியிருக்கிறது!!
பி.கு: இந்த விளையாட்டு M ரேட்டிங் பெற்றுள்ளது அதனால் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடலாம்!!
சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?
IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே பார்ப்பதும் உண்டு. இப்போது மத்திய பிரதேச மாநில அரசு அதற்கும் அடித்துவிட்டது ஆப்பு. IPL போட்டிகளில் ம.பி அரசு Cheerleaders-களை தடை செய்துள்ளது (ம.பியில் நடக்கும் போட்டிகளுக்கு மட்டுமே என நினைக்கிறேன்). "பெண்களை தெய்வமாக சித்தரிக்கும் எங்கள் நாட்டில், இது போன்ற அரை நிர்வானமாக பெண்களை விளம்பரங்களுக்கு பயண்படுத்துவதை தடை செய்கிறோம்" என மும்பை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் "கிரிகெட் வீளையாட்டில் Cheerleaders பயண்படுத்துவது கலாச்சாரத்துக்கு எந்த விதத்தில் கேடு விளைவிக்கிறது? இது எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் (அட்ரா சக்கை... அட்ரா சக்கை...)
இந்திய "கிரிகெட் ரசிகர்கள்"(?) பல Cheerleader's இடம் அத்துமீறி நடந்துகொண்டதும், ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசும் செயல்களில் இரங்கியும் உள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த Cheerleader "ரசிகர்கள் மிகக்கடுமையான ஆபாச வார்த்தைகளை வீசுவதோடு, physical harassmentடிலும் ஈடுபடுகின்றனர்" என வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல மேலும் பல இடங்களில் Cheerleaders சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். எல்லை தாண்டும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என ஒரு குரூப் கொலை வெறியுடன் களமிறங்கியிருப்பதாக கேள்வி!!
இன்னும் Cheerleaders எல்லைக்குள்ளயே வரல அப்புறம் எங்கயா மீறுச்சுனு கேக்குறவங்க, ஒரு மாநாட்டை கூட்டுங்க...(மறக்காம எனக்கும் ஒரு அழைப்பிதழ் அனுப்புங்கப்பா! :-D)
கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு.
இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை நடத்த ஆரம்பித்தது. கால்பந்து விளையாட்டில் இது போன்ற கிளப் விளையாட்டுகள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலம். சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு இணையாக இந்த கிளப் போட்டிகளுக்கு கூட்டம் இருக்கும் ஜர்மனியில் பெர்லின்-ஹேம்பர்க் (Inter-City) கால்பந்து போட்டிகளுக்கு கூட எங்களால் டிக்கட் வாங்க முடியவில்லை அவ்வளவு கூட்டம். ICLலும் இது போல கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பிரபலமாக்கும் முயற்ச்சியில் இறங்கியது. இந்த போட்டிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் 20-20 மேட்ச்சை இந்தியாவில் ஓரளவு பிரபலமாக்கியது. ஒரு நல்ல திட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது.
ICLஐ தொடர்ந்து IPL போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. முகேஷ் அம்பானி, விஜய் மல்லயா, ஷாருக் கான் போன்ற பெரும் புள்ளிகள் களத்தில் குதித்தனர். சில ஆயிரம் கோடிகள் களத்தில் குதிக்க IPL டாக் ஆஃப் தி சேனல்ஸ் ஆனது. அனைத்து ஊடகங்களும் தோனி 9-கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்றும் ஏலத்தின் இன்ன பிற சங்கதிகளும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது!
கோடிக்கணக்கில் புரளும் பணமும் ஊடங்களின் ஓயாத விளம்பரங்களாலும் IPL பயங்கரமான எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தியது. "The mighty power of Advertisements" என்ற வாக்கியத்தை ICL, IPL ஒப்பீடு மூலம் நன்கு அறியலாம்.
போட்டியில் உள்ள அணிகளின் பட்டியல்:
அணி
தொகை
(in Million USD)
ஏலம் எடுத்தவர்
மும்பை
119.9
முகேஷ் அம்பானி
பெங்களூர்
111.6
விஜய் மல்லயா
ஐதராபாத்
107
டெக்கான் க்ரானிகிள்
சென்னை
91
இந்தியா சிமின்ட்ஸ்
டில்லி
84
ஜி.எம்.ஆர் குரூப்ஸ்
மொஹாலி
76
ப்ரீத்தி ஜிந்தா
கொல்கத்தா
75.1
ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மன்ட்
(ஷாருக்கான், ஜூஹி சாவ்லா)
ஜெய்பூர்
67
எமர்ஜிங் மீடியா
இந்த போட்டிகளில் புரலும் பணம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. போட்டியின் மீது கட்டப்படும் சூதாட்டம்/பந்தய தொகை மட்டும் சுமார் 2,000 கோடியாம்!!! ஒலிபரப்பு உரிமையை 10 ஆண்டுகளுக்கு சோனி நிறுவனம் சுமார் 1.026 பில்லியன் US Dollars கொடுத்து வாங்கியுள்ளது!!
T20 IPL போட்டிகளில் உள்ள சில நன்மைகள் * இந்த போட்டிகளின் மூலம் கிரிகெட் என்பது வெறும் விளையாட்டு நாட்டுப்பற்றுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மக்கள் உணரும் வாய்ப்புள்ளது
* போட்டிகளின் போது ஒரு நாட்டு வீரர் இன்னொருவரை கேலி செய்வதும் முறைப்பதும் குறையும் (என்று வேண்டுமானாலும் சேர்ந்து விளையாட நேரிடும் என்ற அச்சமும் இருக்கும்)
* உள் நாட்டுக்குள்ளே வாய்புகள் கிடைக்காமல் முடங்கிக்கிடந்த பல திறமையான வீரர்கள் வெளிச்சத்துக்கு வருவார்கள்
* ரஞ்சி போட்டிகளில் எழும் மாநில பிரிவினை கூட இந்த போட்டிகளில் எழ வாய்பில்லை (போட்டியில் அணிகளின் பெயர் மட்டுமே ஊர்களை குறிக்கின்றது வீரர்கள் வேறு நாட்டவராகவோ மாநிலத்தவராகவோ உள்ளனர்)
* அழகான/கவர்ச்சியான Cheer leadersஇன் குளு குளு Cheering!!!
போட்டியில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் * எந்த இந்திய வீரரும் Man of the match வாங்கவில்லை
* மிகவும் குறைந்த மதிப்பீட்டை பெற்ற ராஜஸ்தான் அணி, அதிகம் பேசப்பட்ட பஞ்சாப் அணியை வீழ்த்தியது
* மெக்கல்லமின் அதிரடி 158ம் இரண்டாவது அதிகம் விலை கொடுக்கப்பட்ட பெங்களூர் அணியின் படு தோல்வியும்!
* புதிய ஜடேஜாவின் சூப்பர் அவதாரம்!! பழய ஜடேஜாவையும் commentary boxல் காணமுடிகின்றது
* Indo-Pak சர்வதேச போட்டிகளுக்கு இணையான கூட்டம்!!
* போட்டி உள்ளூர் நடப்பதை மறந்து இன்னும் சகவீரர்களை முறைத்துக்கொண்டு திரியும் ஸ்ரீசாந்த்!!
நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதமருக்கோ, தேர்ந்து எடுக்கும் உங்களுக்கோ இந்த நாட்டின் மானத்திற்கோ எந்த சம்மந்தமும் இல்லை என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? "Who represents India?" என்று ஒரு உண்மைக் குடிமகனிடம் கேளுங்கள் "Men in Blue" என்று அழகாக சொல்லுவார்கள். அப்ப ஜனாதிபதியெல்லாம் சுத்த வேஸ்ட்டா என்ற அபத்தமான கேள்வியை கேட்டால் "யாரோ ஒரு அம்மாதான் ஜனாதிபதி ஆனா அந்தம்மா பேருதான் நியாபகத்தில் இல்லை" என்று பதில் கிடைக்கும்!
ஒரு ஒரு ஒலிம்பிக் போட்டிகளிளும் ஒரு வெங்கலம் அல்லது ஒரு வெள்ளி வாங்குவது இந்தியாவுக்கு பெருமையாம், இந்த நீலச்சட்டை நாயகர்கள் ஒரு நாள் உலகக் கோப்பையில் வெளியேறியது இந்தியாவுக்கு பெரும் அவமானமாம்?? உலகில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் வெறும் 10 நாடுகள் பங்கு பெரும் கிரிக்கெட் போட்டி எப்படி உலகக் கோப்பையானது என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. அனைத்து நாடுகளும் பங்கு பெரும் ஒலிம்பிக் ஒரு பொருட்டே அல்ல!!
முதலில் இந்த நீலச்சட்டை நாயகர்களின் யோக்யத்தை பார்கலாம். இந்த நீலச்சட்டை விரர்கள் BCCI என்ற பணம் காய்க்கும் நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகளே அன்றி இந்தியாவின் நேரடி செல்லப்பிள்ளைகள் அல்ல (உண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை தாங்கிப்பிடிக்க ஒலிம்பிக் வீரர்கள் தான் வேண்டுமேயன்றி இந்த நீலச்சட்டைகரர்கள் அல்ல). போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயிற்சியில் ஈடுபடுவது போல் பத்திகைக்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு தண்ணியைப்போட்டு மட்டையாகிக் கிடந்த மேட்டர் இவர்கள் தோத்தால் மட்டும் பத்திரிகையில் இடம்பெரும். இவர்களில் எத்தனை பேர் வருமான கணக்கு சரியாக காண்பித்து வரி செழுத்துகிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? உண்மையைக்கூற வேண்டும் என்றால் சரியாக வரி செழுத்தாமல், சரியாக விளையாடாமல் கிடைத்த பெயரை பணமாக்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்கள் அல்லவா தேச துரோகிகள்?
இவர்கள் எந்தக்காலத்திலும் திருந்த மாட்டார்கள் திருந்த வேண்டியது நாம்தான், கிரிக்கெட் ஒரு சாதாரன விளையாட்டு இதுவும் சினிமா போல ஒரு பொழுதுபோக்கு, இதை நாட்டோடு சம்மந்தப்படுத்தி கொண்டாடாமல் இருப்போம்!!