உலகம் மெச்சும் மேதாவிகள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆராச்சியாளர்களிடம் உள்ள ஒரு மிகச்சிறந்த ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் மிகச்சிறந்த கற்பனை வளம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கற்பனை வளத்தை எண்ணி நான் வியக்காத நாளில்லை, தனது ரிலேட்டிவிட்டி தத்துவத்தை அவர் உருகிய விதம், அவரது கற்பனை, அவ்வளவு பிரமிப்பாக இருக்கும்.

ஒருவன் சிறந்த விஞ்ஞானியாகவும் படைப்பாளியாகவும் ஆக மிகமுக்கியமான தகுதி அவனுடைய கற்பனை திறனாகும்.  சிறுவயதில் உங்கள் நண்பர்கள் உங்களது உள்ளங்கைகளை மூடிக்கொள்ள சொல்லிவிட்டு  கண்களை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு மலரை நினைத்துக் கொள்ளச் செய்து சில நிமிடம் கழித்து உங்கள் உள்ளங் கைகளை முகர்ந்து பார்க்க சொல்வர். ஆச்சர்யமாக உங்கள் உள்ளங்கையில் அந்த மலரின் வாசம் வீசும்! உண்மையில் அந்த வாசம் உங்கள் உள்ளங்கைகளில் இல்லை அது உங்கள் கற்பனையில் இருக்கிறது [சிறு வயதில் இது அழகாக வேலை செய்தது இப்போது சரியாக வேலை செய்யவில்லை :(].

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், தற்செயலாக என் பெரியம்மா வீட்டில் ஒரு முத்து காமிக்ஸ் கிடைத்தது, "முகமூடி வீரர் மாயாவி தோன்றும்..." ஏதோ ஒரு கதை. படிக்க படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். என்னால் அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் அணுபவிக்க முடிந்து. மாயாவி வாழும் மண்டை ஓட்டு குகையின் இருள், அந்த காட்டின் ஈரக் காற்று முதலியவற்றை என்னால் உணர முடிந்தது. அது தான் கற்பனையின் சக்தி! குகைக்குள் செல்லாமல், காட்டுக்குள் செல்லாமல் வெறும் படம் வரைந்த காகித்தை உற்றுப்பார்த்து மட்டுமே அதை உங்களால் அனுபவிக்க முடியும். அது தான் நான் படித்த முதல் காமிக்ஸ், அந்த சமயத்தில் அத்தி பூத்தாற் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காமிஸ் கிடைக்கும் அதை படிக்கும் சுகமே அலாதி.

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம் தற்செயலாக ஒரு பெரிய காமிக்ஸ் அதுவும் என் அபிமான கதாநாயகன் "இரும்புக்கை மாயாவி"யின் கதை. மூன்று வேற்று கிரக மனிதர்கள் பூமியில் ஊடுருவி பூமியை கைப்பற்ற முன் எச்சரிக்கையாக ராணுவ தளவாடங்களையும், மனிதர்களின் தற்காப்பு கட்டமைப்புகளையும் சேதப்படுத்துவார்கள். அவர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்களுக்கு தலையில் முடிக்கு பதிலாக கண்ணாடி இருக்கும். கதை ஒரு துணிக்கடையில் நடந்த கொள்ளையில் இருந்து தொடங்கும். அந்த கடையில் மூன்று தொப்பிகள் மட்டும் காணாமல் போயிருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த காமிஸ்ஸை குறைந்த பட்சம் 10 தடவையாவது படித்திருப்பேன். பத்து முறையும் கிளைமாக்ஸில் அந்த மூன்றாவது வேற்றுகிரகவாசியை மடக்கும் காட்சி என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் விட்டதில்லை.

கிட்டத்தட்ட அதே ஆண்டு என் அக்காவின் திருமணம் நடந்தது. மாமா நாவல்கள் அதிகம் படிப்பார். அப்போது மாமாவிடம் இருந்த சுபா அவர்கள் எழுதிய "மரணத்தை விற்றவன்" என்ற நாவல் என் கையில் கிடைத்தது. முதல் அத்தியாயத்திலேயே அதில் மூழ்கிவிட்டேன். கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரங்கள் உட்கார்ந்த இடத்தைவிட்டு அணு அளவும் அசையாமல் கதையை படித்து முடித்தேன்.

காமிஸ்க்கும் நாவலுக்கும் பெரிய வித்யாசமில்லை. காமிஸ்ஸில் படங்கள் மூலம் நடப்பவற்றை உங்கள் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதையே நாவலில் வாக்கிய வர்ணணை மூலம் காட்சியை உங்கள் கண் முன் கொண்டு வருவார்கள். மரணத்தை விற்றவன் நாவலில் கொடைக்கானல் ஏரியை சுற்றி சில காட்சிகள் நடக்கும், நாவல் படிக்கும் போது எனக்குள் தோண்றிய கற்பனை காட்சிக்கும் பின்நாளில் நான் நேரில் கண்ட கொடைக்கானலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப்போனால் எனது கற்பனை கொடைக்கானல் ஏரி சுத்தமாக இருந்தது!

தொடரும்...

நான் ஜூலையில் எழுதிய பதிவை புதிய பதிவைப்போலவும், இன்று எழுதிய பதிவை முந்தைய பதிவுகளைப்போலவும் காட்டுகின்றது. மேலும் என்னால் பதிவுகளை வகைப்படுத்து முடியவில்லை!!!! இது தமிழ்மணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையா இல்லை தமிழ்மணம் செயல்படுத்தியிருக்கும் புதிய featureஆ?? தமிழ்மணம் Beta நிச்சயம் முந்தய தமிழ்மணம் போல இல்லை.

முத்துக்குமரனின் பழைய பதிவாக நடிகர் M.N நம்பியார் மரணம் என்று தமிழ்மணம் காட்டியது. என்னது நம்பியார் இறந்துவிட்டாரா?? அதுவும் நேற்று... இது எப்படி எனக்கு தெரியாமல் போனது என்ற குழப்பத்துடன். thatstamil சென்று பார்ததேன்... அந்த சோக சம்பவம் நடந்தது இன்றுதான் என்று தெரிந்தது. நம்பியார் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது நடிப்பு திறன் பற்றி மக்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நிச்சயம் அவரது இழப்பு திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். மறைந்த திரு. நம்பியார் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்!

தமிழர் என்ற வலைப்பதிவில் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. பதிவரின் தினமலர் மீதான ஆதங்கம் நல்லவிஷயம்தான் என்றாலும் அவர் ஒப்பீடு செய்துள்ள விஷயத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பதிவில் சொல்லியிருப்பதன் கரு... "உலகத்தின் மிகப்பெரிய திருவிழாவான ரஜினியின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார், இப்பேர்பட்ட அளப்பரிய தியாகத்தை கண்டு தினமலர் போன்ற பத்திரிக்கைகள் திருந்துங்கள்!"

தினமலர் திருந்த வேண்டும் என்ற சீரியஸான விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை ரஜினியின் வேண்டுகோள் என்ற காமடியோடு ஒப்பிட்டு, சொல்லவந்த மேட்டரையும் மிகப்பெரிய காமடி ஆக்கிவிட்டார் பதிவர்.

தினமலர், ரஜினி இருவரையும் பற்றி சிறிது அலசுவோம். First and foremost இருவரது பிழைப்பும் விளம்பரத்தை நம்பித்தான். இருவருக்கும் வருமானம் விளம்பரங்களால்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தினமலரின் விளம்பரம் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள், ரஜியின் விளம்பரம் அந்தந்த சீசனுக்கு ஏற்றது...

1. காவேரி பிரச்சனை சீசன் - உண்ணாவிரதம்
2. ஒகேனேகல் பிரச்சனை சீசன் - கன்னடர்களை எதிர்த்து கொலைவெறி பஞ்ச் டயலாக்குகள்
3. குசேலன் படம் ரிலீஸ் சீசன் - மண்ணிப்பு கடிதம், விளக்கம் etc.. (போட்ட வேஷம் கலைஞ்சிடுச்சு டும்... டும்... டும்... டும்...)
4. ஈழத்தமிழர் பிரச்சனை வலுத்திருக்கும் சீசன் - உண்ணாவிரதம், பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து இன்னபிற இத்தியாதிகள்...

* விஜய்க்கு, டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட போது விஜய் சொன்னாராம் "இனி மேல் ரசிகர்கள் என்னை டாக்டர் விஜய் என்று கண்டிப்பாக அழைக்க கூடாது..." என்று!!!!
* சங்ககால காதல் தலைவி, காதல் தலைவனிடம் சொன்னாளாம் "நான் குளத்துக்கு தண்ணீர் எடுத்து வர போகிறேன் நீங்கள் கண்டிப்பாக அங்கே வரக்கூடாது..." என்று!!!
* ஈழத்தமிழரின் பிரச்சனையை பார்த்து ரஜினி சொன்னாராம் "என்பிறந்தநாளை மக்கள் கண்டிப்பாக கொண்டாட கூடாது" என்று!!!
இந்த மூன்று விஷயங்களுக்கும் ஏதாவது ஒற்றுமை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .

உண்மையில் தமிழீத்தின் மீது அக்கரை உள்ளவர், தனது பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஈழத்தமிழருக்கு பணமாகவோ, பொருளாகவோ, உணவாகவோ உதவி செய்யுங்கள் என்று தனது ரசிகளுக்கு உத்தரவிடட்டும். அல்லது இவரே இவரது பிறந்தநாளை தமிழ்நாட்டில் அதிகளாக இருக்கும் மக்களோடு கொண்டாடட்டும்.

நம்ம ஊர் விசிலடிச்சான் குஞ்சுகள் கண்களில் ரசிகன் எனும் மஞ்சள் கண்ணாடி மாட்டிக்கொண்டு திரிவதால் ரஜினி போடும் படங்கள் அனைத்தும் மஞ்சளாகவே தெரிகிறது (அந்த கண்ணாடியை கழட்டி வைத்துவிட்டு பாருங்கள் உண்மை நிறம் தெரியும்!). ரஜினியை பார்த்து தினமலர் திருந்தமுடியாது மேலும் விளம்பர பைத்தியம் பிடித்து கெட்டுத்தான் போகும்!!!

பி.கு1: காந்தி "என் மக்களில் பலர் மேல் சட்டை அணியாமல் வருமையில் உள்ளனர், அதனால் நானும் மேல்சட்டை அணியமாட்டேன்" என்று கூறியதையும்... "ஈழத்தமிழர்கள் கஷ்டபடும் போது என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்" என்று ரஜினி கூறியதையும் ஒப்பிட்டு வரும் கொலைவெறி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது .

பி.கு2: சிறு வயதில் இதே ரஜினிக்காக கட்டிப்புரண்டு நான் சண்டை போட்ட என் கமல் ரசிக நண்பர்களுக்கு, நான் அவனில்லை என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

பதிவெழுதி பல நாட்கள் ஆச்சு, ஏதாச்சும் எழுதாலாம்னு பாத்தா எழுதுறதுக்கு ஒரு மண்ணும் தோண மாட்டேன்குது. இந்த லட்சனத்துல நான் டெம்லேட் எடுத்து பயண்படுத்திக்கொண்டிருந்த வெப்சைட்டும் திவாலாகிவிட... எனது பதிவே மஞ்சள் கலர்ல அலங்கோலமா ஆகிடுச்சு. சரி முதல்ல டெம்ப்ளேட்டை சரி பண்ணுவோம்னு, Gimp (2.6.2) டவுண்லோட் பண்ணுனேன், CSS டுட்டோரியல்களை படிக்க ஆரம்பிச்சேன், எழுதுடா கருப்பா ஒரு டம்ப்ளேட்டைனு எழுத ஆரம்பிச்சேன். ஒன்னும் சரிப்பட்டு வரலை... சரினு ஒரு வழியா வெப்பிலிருந்து ஒரு டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்து, அதில் நான் Gimp பயன்படுத்தி வரைந்த இமேஜ்களை பயன்படுத்தி ஒரு புது டெம்ப்லேட்டை தயார் செய்தாச்சு.

இன்னும் வேலை முழுசா முடியலை என்றாலும் பதிவுகளை பப்ளிஷ் பண்ணும் அளவுக்கு வந்தாச்சு. IE8, Firefox 3, Google Chrome ஆகிய வலை உலாவிகளில் நன்றாக தெரிகிறது. IE7ல் பதிவகள் சிதைகின்றன. சீக்கிரம் சரி செய்ய வேண்டும்.

ஒரு புது உற்சாகத்தோட ஆரம்பிச்சிருக்கேன்... எவ்வளவு தூரம் போகமுடியுது பாக்கலாம்!

அது நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். திருமங்கலம் PKN மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று வெள்ளிக்கிழமை நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஞாயிற்றுக்கிழமை எங்கள் பள்ளியிலிருந்து செல்லும் சுற்றுலாவுக்கு என் பெற்றோர் 100ரூ கொடுத்துவிட்டு சென்றிருந்தனர். 80 ரூ சுற்றுலா கட்டணம் 20ரூ செலவுக்கு... 20ரூ என்பது எனது 1 மாதத்துக்கான பாக்கெட் மணி! கையில் ஏற்கனவே என் சேமிப்பில் இருந்த 5ரூபாயும் இருந்தது, நானும் என் நண்பனும் அன்று சினிமாவுக்கு போகலாம் என முடிவு செய்தோம். அப்போது பானு தியேட்டரில் "பூவே உனக்காக" படம் ஓடிக்கொண்டிருந்தது. மாலை பள்ளி முடிந்ததும் மாலை காட்சிக்கு தியேட்டர் முன் ஆஜராகியிருந்தோம்.

தியேட்டரில் சரியான கூட்டம், நான் டிக்கெட் கவுண்டருக்குள் நுழைந்தேன்... திடீரென்று பாக்கெட்டிலிருந்த தனலட்சுமி நியாபகத்துக்கு வரவே, அதை எடுத்து பாதுகாப்பாக என் நண்பன் கையில் திணித்துவிட்டு கவுண்டருக்குள் நுழைந்தேன். தியேட்டருக்கு வெளியே ஒரு மூலையில் ஒருவன் லங்கா கட்டை உருட்டிக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி சில தடியர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். சில லுங்கிக்கார இளைஞர்கள் சுற்றி அமர்ந்து 50 பைசா 1ரூபாய் நாணயங்களை கட்டங்களில் கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர். என் நண்பனிடம் அவர்களுக்கு மிக அருகில் போகாதே என்று எச்சரித்துவிட்டு நான் கூட்டத்துக்குள் நுழைந்தேன்.

ஒரு வழியாக அடித்து பிடித்து டிக்கட் வாங்கிக்கொண்டு, மகிழ்ச்சி பொங்க வந்து வெளியே பார்த்தபோது என் நண்பனை காணவில்லை!!! அங்கே லங்கா கட்டை உருட்டிக்கொண்டிருந்த அந்த கூட்டத்தையும் காணவில்லை... அட்ரினலின் உடலில் அதிகமாக சுரப்பதை என்னால் உணரமுடிந்தது. ஒரு வழியாக அங்குமிங்கும் தேடி கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தவனை கண்டுபிடித்தேன். என்னடா ஆச்சு உனக்கு என்றேன் அதிர்ச்சியடந்தவனாய்! அங்கே லங்கா கட்டை உருட்டும் கூட்டத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, பக்கத்தில் நின்ற தடியன் கையிலிருந்த 100ரூபாயை பிடிங்கி ஆட்டத்தில் போட்டுவிட்டான், கட்டையை உருட்டி 100ரூபாயை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டான் என்றான் கண்ணீரினூடே. என் தலையில் ஒரு பலத்த இடி விழுந்தது, ஏனோ திடீரென, ஒரு ஃபோட்டோவை எட்டாக கிழித்து மூலைக்கு மூலை நூலைக்கட்டி இன்ச் பை இன்சாக இழுக்கும் காட்சி நினைவில் வந்து இம்சை படுத்தியது. ஆத்திரத்திலும், இயலாமையிலும் கண்கள் சிவந்து நீர் கோர்த்தது. அப்போதைய நூறு ரூபாய் என்பது இன்றைய ஒரு லட்சத்துக்கு சமம்.

நான் நிச்சயம் போலீஸில் சொல்லவேண்டும் என்றேன். அவனும் அரை மனதாக ஒப்புக்கொண்டான். உடனே போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்று போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தோம். சிறிது நேரத்தில் அவனுக்கு கைகால்கள் உதற ஆரம்பித்தது. மேலும் போலீஸிடம் போகவேண்டியது இருந்தால் அவர்களுக்கு கட்டியழ ஒரு பத்து ரூபாயாவது வேண்டும், என்னிடம் பத்து காசுகூட இல்லை இருந்த காசும் டிக்கெட் எடுப்பதில் செலவழித்தாகிவிட்டது. எனக்கும் போலீஸ் ஸ்டேஷன் போவதில் தயக்கம் இருந்தது. அட்லீஸ்ட் எடுத்த டிக்கட்டுக்கு படமாவது பார்கலாம் என்று மீண்டும் தியேட்டருக்கு திரும்பினோம். நான் படம் பார்க்கும் மூடில் இல்லை. இருந்தாலும் இருவரும் தியேட்டர் சீட்டில் அமர்ந்தோம். எப்போது எதையாவது பற்றி சதா பேசிக்கொண்டே இருக்கும் நாங்கள் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக எதுவும் பேசாமல் இருந்தோம். படம் ஆரம்பித்தது, அந்த சமயத்தில் படத்தோடு படமாக ஒன்றி கதாநாயகன் அழும் போது அழுது, சிரிக்கும் போது சிரித்து மகிழும் கூட்டத்தில் ஒருவன். படம் போகப் போக எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் வாழ்நாளில் பார்த்த ஒரு அற்புதமான படம் என்று எண்ணத்தொடங்கினேன். கதையும், அதிலிருந்த சிறு முடிச்சும் அவிழக்கப்பட்ட விதமும் என்னை மிகவும் கவர்ந்தது. படம் முடிந்து வெளியே வந்த போது கதாநாயகனும் கதாநாயகியும் ஜோடி சேராதது தான் எனக்கு மிகப்பெரிய கவலையாய் இருந்தது. அடுத்தநாள் என் நண்பனின் செலவுக்கு அவர்கள் வீட்டில் கொடுத்த ரூபாயையும் எனது டீச்சர்களிடமிருந்து வாங்கிய கொஞ்சம் கடனும் சேர்த்து ஒருவழியாக 80ரூபாய் தேரியது.

மீண்டும் இன்று நான் அதே படத்தை பார்த்தேன்... அந்த படம் எனது முந்தைய சோக நிகழ்ச்சியின் நினைவுகளை கிளறியதே தவிற, முன்பிருந்த லயிப்பு அதில் இல்லை. அறிவின் முதிற்ச்சி காரணமாக எந்த திரைப்படத்தை பார்த்தாலும் அதிலுள்ள செயற்கைதனம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. நிச்சயம் சிறுவயதில் சினிமா வெறியனாக இருந்த கருப்பன், இன்று தொழில்நுட்பத்தில் முன்னேறி சினிமாவில் ஒரு ஃபிரேமில் உள்ள ஆயிரம் குறைகளை கண்டுபிடிக்கும் திறம் படைத்த இந்த கருப்பனைவிட சந்தோஷமானவன், வாழ்கையை மகிழ்ச்சியாக கழித்தவன்!!

நிச்சயம் Ignorance is Bliss (அறியாமையே மிகப்பெரிய பேரின்பம்)!!

எனது நண்பர்கள் சென்னையில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனக்கும் அந்த சமயத்தில் ஏகப்பட்ட விடுமுறைகள் பாக்கியிருந்ததால் இரண்டுநாள் லீவைப்போட்டுவிட்டு சென்னை சென்றேன். சென்னையில் எனக்கு பிடித்த இடம் பீச் (மெரினா என்றில்லை, சாந்தேம், பாலவாக்கம் கொட்டிவாக்கம் என எந்த பீச் போனாலும் குழந்தை பையனாக மாறிவிடுவேன்).

நன்பர்களுடன் அன்று சாந்தோம் பீச் செல்வது என முடிவெடுத்தோம், பீச்சில் மாங்காய் துண்டு அழகாக வெட்டிவைத்திருப்பார்கள் அதை 10, 15 என வாங்கி வெட்டு வெட்டு என வெட்டுவது எனது பழக்கம். அன்றும் எப்போதும் போல 5 மாங்காய் துண்டுகளை (முதல் ரவுண்டுக்கு தான்) வாங்கி சாப்பிடப்போகும்போது. என் நண்பன் பதறிப்போய் "டேய்...!" என்று கத்தினான். அதிர்ச்சியில் வாயில் கவ்வியிருந்த மாங்காய் துண்டு கீழே விழுந்து விட்டது. "என்னடா?" என்றேன் கண்களில் கொலை வெறியுடன்.

உடனே "அவன் மாங்கா திதேடா அதுல எய்ட்ஸ் வருதாம்" என்றான். எனக்கு பயங்கர ஆச்சர்யம், "மாங்காய்க்கும் எய்ட்ஸுக்கும் என்னடா சம்மந்தம்?" என்றேன். உடனே தனக்கு வந்திருந்த ஃபார்வேர்ட் செயின் மெயில் பற்றி கூறினான். அவன் கூறிய கதை இது தான்

சிறுவன் ஒருவன், தனது பெற்றோருடன் பீச்சுக்கு சென்றிருந்த போது அவன் மாங்காய் வாங்கி தின்றானாம். அவன் தின்ற அந்த நாளில் இருந்து 15 நாட்களுக்கு நோய்வாய்ப்பட்டானாம். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று கூறிவிட்டார்களாம். அவனது பெற்றோருக்கு இல்லாமல் இவனுக்கு மட்டும் இருப்பதை கண்டு ஆச்சர்யமான மருத்துவர்கள். அவன் ஏதாவது சாப்பிட்டானா என்று கேட்டார்களாம், சிறுவனும் பீச் மாங்காய் பற்றி கூறினானாம். உடனே மாங்காய் விற்பவரை பிடித்து பரிசோதித்ததில் அவருக்கும் எய்ட்ஸ் இருப்பது தெரியவந்ததாம். அவர் மாங்காய் வெட்டும் போது கத்தி கையில் பட்டு ரத்தம் சிறிது அந்த மாங்காயில் தங்கிவிட்டதாம் அதை சாப்பிட்டதால் தான் அந்த பையனுக்கு எய்ட்ஸ் வந்துவிட்டதாம்!!!

கேட்டுவிட்டு எனக்கு தலை சுற்றியது. முட்டாளாக இருப்பதில் தப்பில்லை இப்படி அடிமுட்டாளாக இருக்காதே என்று அறிவுறைகளை அள்ளிவிட்டேன். இவ்வாறெல்லாம் எய்ட்ஸ் பரவ வாய்பில்லை என்று இந்த காரணங்களை சொன்னேன்.

1. HIV கிருமி உள்ள ரத்தம் காற்றோட்டத்தில் காயும் போது அழிந்துவிடும்.
2. மாங்காயில் தூவும் உப்பு பல கிருமிகளை கொல்லும் திறன் வாய்ந்தது.
3. HIV கிருமி ரத்த மண்டலித்தில் கலந்தால் தான் நோய் தாக்கும், உணவு மண்டலத்துக்கு போகும்போது வயிற்றில் இருக்கும் அமிலங்கள் அவற்றை கொன்றுவிடும்
4. HIV ரத்தத்தில் இருப்பது தெரிய குறைந்த பட்சம் 40 நாட்கள் ஆகும்
5. எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் நோய் தொற்றி குறைந்தது 1 வருடம் கழித்துதான் தெரியும்!
6. இது போன்ற முக்கிய செய்திகள் முதலில் Mass Mediaக்களுக்குதான் தெரிந்திருக்கும் யாரோ ஒரு அனானிக்கு அல்ல.

அதன் பிறகு எனக்கே இந்த மெயிலின் Pineapple, மிளகாய் பஜ்ஜி, வெண்டைக்காய் பொறியல் என பல வெர்ஷன்கள் வந்துவிட்டன. நேற்று வந்த அன்னாச்சி பழ வெர்ஷன் கீழே உள்ள படத்தில் இருக்கிறது


இது மட்டுமல்ல பில் கேட்ஸ் நீங்கள் ஒவ்வொறு முறையும் ஒரு குறிப்பிட்ட மெயிலை நண்பர்களுக்கு அனுப்புவதற்கு அவரது சொத்திலிருந்த பங்கு கொடுப்பார்.

ஒரு ஏழை குழந்தையின் Brain Tumor குணமாக்க உதவுங்கள் என ஒரு அழகான பாப்பாவின் போட்டோ போட்ட மெயில் நான் முதன் முதலில் 1995ல் மெயில் ஐடி உருவாக்கிய நாளில் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கிறது!

இன்னும் எத்தனையோ சங்கிலித்தொடர் மின்-அஞ்சல்கள் நமக்கு வந்துகொண்டுதான் இருக்கிறது அதையும் நம்பி பயந்து பயந்து வாழும் நண்பர்கள் பலர் இருக்கின்றனர்!


கணினியில் Top Ranking விளையாட்டுகளுள் ஒன்றான GTA (Grand Theft Auto)வின் நான்காவது வெர்ஷனை இன்று Rock Star Games நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று Microsoft's xbox, Sony Playstation 3 இரண்டுக்குமான வெர்ஷன்கள் மட்டும் வெளியிட்டுள்ளது. இன்னும் PC வெர்ஷன் வெளியிடப்போகும் தேதி குறிப்பிடபடவில்லை.

GTA விளையாட்டுகள் முற்றிலும் 3-டி விளையாட்டு, நேர்த்தியான வடிவமைப்பும் விளையாட்டு யுக்திகளும் இந்த விளையாட்டை கணினி விளையாட்டுளின் ராஜாவாக மக்கள் கருத காரணமாயிருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். கேம் ஸ்பாட்டில் 10/10 ரேட்டிங் வாங்கியிருக்கிறது!!

பி.கு: இந்த விளையாட்டு M ரேட்டிங் பெற்றுள்ளது அதனால் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடலாம்!!