நான் சில நாட்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்பூர் சென்றிருந்தேன். அங்கு நான் சில சுற்றுலாத் தளங்களுக்குச் சென்றேன் அங்கு நான் சந்தித்த சில அனுபவங்கள் என்னை இந்தியன் என்று சொல்லவே தயங்க வைக்கின்றது!


படத்திலுள்ள அறிவிப்பு பலகையை பாருங்கள்! இந்திய சுற்றுலா பயணிக்கு வசூலிக்கும் பணத்தைவிட அயல்நாட்டு பயணிகளுக்கு 5 மடங்கு அதிகம்!!! இது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டதற்கு அவர்களிடம் அதிகப்பணம் இருக்கின்றது என்று பதில் கூறினார்கள்.

சரி அதுபோகட்டும் எவ்வாறு வெளிநாட்டவர்க்கும் நம்நாட்டவர்க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்படுகின்றது என்று தெரியுமா?

தோலின் நிறத்தால்!

எல்லாக் கருப்பர்களும் (ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவராக கருதப்படுகின்றனர்), எல்லா வெள்ளையர்களும் ஐரோப்பா அல்லது அமேரிக்கர்களாக கருதப்படுகின்றனர். மாநிறத்தவர் எல்லாம் இந்தியர்களாம்! என்ன கொடுமையிது?

நான் கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றுள்ளேன் எங்கும் இது போன்று ஒரு அவலத்தை நான் கண்டதில்லை. அங்கு அனைவரும் ஒன்றாகவே நடத்தப்படுகின்றனர். சமத்துவத்தைப்பற்றி வாய்கிழிய பேசும் நாம் எவ்வளது சமத்துவத்தை கடைபிடிக்கிறோம் என்று பாருங்கள். இந்த அறிவிப்பு இந்த ஒரு இடத்தில் மட்டுமல்ல கிட்டத்தட்ட ஜெய்பூரில் மற்றும் ஆக்ராவில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிளும் காணலாம்.

இதில் இன்னொரு கொடுமை என்ன என்றால் அனைத்து நாட்டவரும் பணக்காரர்கள் இல்லை... இந்த பூவுலகில் இந்தியாவைவிட ஏழைநாடுகள் தான் அதிகம் உள்ளன! அதிகப்பணம் கொடுப்பதால் இவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் கிடைப்பதில்லை. At least இவர்களுக்கு ஒரு அந்தந்த சுற்றுலாத்தலத்தை விவரிக்கும் சில கை ஏடுகளை கொடுக்கலாம், சில கைடுகளை நியமிக்கலாம்.

இதைத்தவிற Domestic விமான கட்டணமும் வெளிநாட்டவர்க்கும், இந்தியர்களும் வேறு வேறு :-(

நான் இந்த சுட்டியில் உள்ள கதையை படித்தேன். இதிலிருக்கும் தகவல்கள் புதிதாக கடன் அட்டை உபயோகிக்கும் மக்கள் மனதில் புளியைக்கறைக்கும்... ஆனால் கடனட்டையில் இதுபோன்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை... என் கடனட்டை உபயோக அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட சில தகவல்கள் இதோ...

1. கடனட்டை எண்கள், கதையில் குறிப்பிட்டுள்ளது போல, அடுத்தடுத்த எண்களாக இருக்காது. இந்த எண்கள், ஒரு குறிப்பிட்ட (CRC) எண் கூட்டுத்தொகை மூலமாக உருவாக்கப்படுகிறது. ஆகையால், தவறுதலாக எழுதப்படும் எண் இன்னொருவரின் எண்ணாக இருப்பதற்கு மிக மிக குறைந்த வாய்ப்புகளே உள்ளது (கிட்டத்தட்ட இவ்வாறு நடக்காது என்றே கூறலாம்).

2. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலைகள் கிராஸ்ட் (Crossed/Account Payee) காசோலைகளாக இருக்க வேண்டும் இல்லையேல் காசோலை நிராகரிக்கப்படும்.

3. கிராஸ்ட் காசோலைகள் மூலம் பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக்கணக்குக்கு மட்டுமே மாற்ற இயலும். அதை காசாளரிடம் (cashier) கொடுத்து பணமாக பெற இயலாது.

4. சேமிப்பு கணக்கிலிருந்து காசோலை மூலமாக வேறு கணக்கிற்கு மாற்றப்படும் பணம் சம்பத்தப்பட்ட விவரம், சேமிப்பு வங்கிக்கணக்கு ரெக்கார்டுகளிள் இருக்கும். இந்த ரெக்கார்டுகளை, சேமிப்பு கணக்கின் உரிமையாளர், எந்த நேரத்திலும் தொலைபேசி மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ, வேறுசில வழிகள் மூலமாகவோ வங்கியிலிருந்து பெற இயலும்.

5. கடனட்டைக்கு செழுத்தப்படும் காசோலையின் கணக்கு, அந்த கடனட்டை உரிமையாளரின் பெயரில் இருத்தல் அவசியம். உதாரணமாக KARUPPAN என்ற பெயரில் உள்ள கடன் அட்டைக்கு, UNKNOWN என்ற பெயரில் உள்ள சேமிப்பு கணக்கிலிருந்து செழுத்த இயலாது.

எனவே சுப்பிரமணியம் எண்களை தவறாக எழுதி, அந்த தவறான எண் வேறு ஒருவருடயதாக இருப்பதும், அந்த ஒருவரின் பெயரும் சுப்பிரமணியம் என்று இருப்பதும் இயலாத ஒன்று.


வங்கியில் பணிபுரியும் நன்பர்கள் தயவு செய்து தகவல்கள் சரியானவையா என்று தெரிவிக்கவும்.

என்னுடய நீண்டநாள் கணவு இந்த அழகான மாலைப் பொழுதில் அரங்கேறுகிறது. சமீப காலமாக சிறியவர் முதல் பெரியவர் வரை "Blogg" என்ற வார்த்தையை தாரகமந்திரம் போல் உபயோகிக்கின்றனர். இதோ குதித்துவிட்டேன் கோதாவில்...

என்றோ ஒரு நாள் நான் ஒரு நாளேட்டில் ஒரு கைதியின் பேட்டியை படிக்க நேர்ந்தது. அந்த கைதி தனது முதல் கொலை முதல் முத்தத்தை போன்று இன்பமாய் இருந்தாய் கூறியுள்ளான். நானும் என் முதல் பதிவு இனிமையாக இருக்குமென நம்புகிறேன் (எனக்கு மட்டுமாவது).

ம்... இப்போது பிரச்சனை என்னவென்றால் எதைப்பற்றி எழுதுவது? அரசியல்? சினிமா? பொது? கதை? ஹா... முதலிலேயே ஒரு கருத்தை பற்றி எழுவதற்க்கு எனக்கு மனமில்லை... வேண்டுமானால் இந்த முதல்பதிவை தமிழ் பதிவியல் வித்துவான்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்க்காக வைத்துக்கொள்ளலாம்!

பெரியோர்களே, சிறியோர்களே இந்த அடியேனுக்கு அனேக ஆசி வழங்கி உங்களுள் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
கருப்பன்.

பி.கு: இந்தப்பதிவை தமிழில் எழுத நான் எந்த ஒரு மொழிமாற்றியையும் பயன்படுத்தவில்லை மாறாக இது நேரடியாக தமிழ் (unicode) தட்டச்சு மூலமாக உள்ளீடு செய்யப்பட்டது. பிழை இருப்பின் மன்னித்தருளவும்.