கணினி உபயோகிப்போர் அனைவருக்கும் வைரஸ் என்பது மிகவும் பழக்கமான வார்த்தை. வைரஸ்ஸை தடுப்பதற்க்கு ஆன்டி-வைரஸ் தான் ஒரே வழி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால் முறையான செட்டிங் செய்வதாலும், இன்டர்நெட், பென்டிரைவ் பயன் படுத்தும் போது கவனமாக இருப்பதாலும் பெரும்பாலான வைரஸ்களை தடுக்க முடியும். Virus/Trojans/Worms தடுப்பதற்க்கு சில வழிமுறைகளை கீழே பார்க்கலாம்

பயனர் அக்கவுன்ட் உபயோகம்
* உங்கள் கணினியில் இரண்டு பயனர் (User) அக்கவுன்ட்கள் உருவாக்குங்கள்.
* ஒரு பயனருக்கு கணினி நிர்வாக உரிமையை வழங்குங்கள் (Administrator Rights)
* இன்னொறு பயனருக்கு உபயோக்கிப்போர் உரிமையை வழங்குங்கள் (User Rights)
* முதல் பயனர் அக்கவுன்டை கணினி நிர்வாகத்திற்கு (புதிய மென்பொருள் நிறுவுதல், காலத்தை மாற்றியமைத்தல்) முதலியவற்றுக்கு பயன்படுத்துங்கள்
* இரண்டாவது பயனரை மற்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துங்கள் (Web Browsing, programming, image viewing, movie watching etc..)

Autorun Disable செய்தல்
* பென்டிரைவ், சி.டி, முதலிய வெளியில் எடுத்துச் செல்லக்கூடிய மீடியங்களின் மூலம் பரவும் வைரஸ், வின்டோஸில் உள்ள ஆட்டோரன் (Autorun) சேவையை பயன்படுத்துத்திக்கொள்கிறது.

* ஆட்டோரன் சேவை பெரும்பாலான நேரங்களில் நமக்கு தேவைப்படுவதில்லை அதனால் அதை Disable செய்வது நல்லது.

* Start Menu->Run க்கு சென்று gpedit.msc என்று டைப் செய்து OK பட்டனை அழுத்துங்கள். கீழ்கானும் வின்டோ திறக்கும்
* படத்தில் உள்ளதைப்போல இடதுபுறம் உள்ள கிளையில் User Configuration --> Administrative Templates --> System என்ற ஃபோல்டரை திறந்து வலது புறம் உள்ள
Turn off Autoplay என்ற ஐட்டத்தை இரண்டு முறை சொடுக்குங்கள் (Double Click).

* புதிதாக தோன்றும் வின்டோவில் Enabled என்பதை தேர்வு செய்து All Drives என்பதை தேர்வு செய்யவும். OKவை சொடுக்கி வின்டோவை மூடுங்கள்

எக்ஸ்டன்ஷனை காட்டச்செய்தல்
* பல வைரஸ்கள் பார்பதற்கு ஃபோல்டர்களை போலவே காட்சியளிக்கும், ஆனால் அவற்றின் எக்ஸ்டன்சன் .exe என்று இருக்கும் (கீழே உள்ள படத்தை பார்க்கவும், பச்சைவட்டம் உன்மையான ஃபோல்டர், சிகப்பு வட்டம் வைரஸ்)
* எக்ஸ்டன்ஷன் காட்டப்படவில்லை என்றால், இதுபோன்ற வைரஸ்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது
* வின்டோஸ் பைல் எக்ஸ்டன்ஷன்களை காட்டுவதற்க்கு Control Panel-->Folder Option திறந்து கீழ் காணும் படத்தில் உள்ளது போல் Hide Extensions for known file types என்ற டிக் பாக்ஸில் உள்ள டிக்கை எடுத்துவிடுங்கள்.
* .exe, .pif, .scr, .com, .bat, .cmd போன்ற எக்ஸ்டன்ஷன்களை கொண்ட பைல்களை (நீங்கள் நிறுவாமல் இருக்கும் பட்சத்தில்) சொடுக்காதீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கண்ட கண்ட IE Toolbar-களை நிறுவாதீர்கள்!!!


பெரும்பாலும் வைரஸ்கள் நமது கவனக்குறைவால்தான் பரவுகின்றன, கவனமாக இருந்தால் வைரஸ்கள் ஒன்றும் பெரிய தொல்லை கொடுக்கமுடியாது.

கொலைக்கான அர்த்தம் நமக்கு மனிதனின் உயிரை எடுத்தல் என்றுதான் சொல்லித்தரப்பட்டுள்ளது. ஆனால் மனிதனின் உயிரை எடுப்பதைவிட கொடூரமான கொலைகள் நமது கண்முன் நடந்தும் நாமெல்லாம் அதை கண்டுகொள்ளாக் குருடர்களாகவே வாழ்கிறோம். எனது இந்தப்பதிவு கொலையாகும் மனிதர்களைப்பற்றியல்ல, மனிதானால் கொலை செய்யப்படும் இயற்கை பற்றியது!

இயற்கை உலகத்திற்கு அளித்துள்ள பல பரிசுகளுள் முக்கியமானது மரங்கள்! ஒரு விதை நல்ல மரமாக வளர்வதற்க்கு குறைந்தது 100 வருடங்கள் பிடிக்கிறது, அதன் ஆயுள் காலம் முடிவதற்கு சில 100 வருடங்கள் ஆகிறது. வெறும் 20 ஆண்டுகளில் இளமையடைந்து, 60 ஆண்டுகளில் மாண்டுபோகும் மனிதன் மரங்களை கொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்?

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினமும் தன் வாழும் இடங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கு ஏற்ப தான் வாழும் இடங்களை மாற்றியமைக்கிறான்! இதை நாமெல்லாம் நாகரீக வளர்ச்சி என்று மார்தட்டிக்கொள்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நம் உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை அழிப்பது மட்டுமல்லாமல் நம்மையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மேலே உள்ள படங்கள் பெங்களூரில் எடுக்கப்பட்டவை! பெங்களூர் 7 வருடங்களுக்கு முன்னால் நான் வந்த போது "பூங்கா நகரம்" - ஆக இருந்தது, இன்றோ இது "புழுதி நகரம்"-ஆக உள்ளது. நான் பெங்களூர் வந்தபோது ஜூன் மாதம், குற்றாலித்தில் இருப்பது போல் காற்றில் மிதக்கும் சாரல், லேசான வெண்பனி, அடர்ந்த மரங்கள், என சொர்கத்திற்குள் நுழைந்த மாதிரி இருந்தது. சூரிய வெளிச்சத்தை பார்க்க கிட்டத்தட்ட பல மாதங்கள் பிடித்தது. தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் கூட இங்கு மிதமான வெப்பமாக இருக்கும் வெய்யில் தரையில் படாத அளவுக்கு மரங்கள் இருக்கும், ரோட்டோரங்களில் நடப்பதே சுகமாக இருக்கும். இன்றோ நிலமை தலைகீழ் பகலில் சுட்டெரிக்கும் வெய்யில் மற்றும் தூசு, இரவில் கடும் குளிர்! பாலைவனத்தில்தான் இவ்வாறு இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மரங்கள் அனைத்தையும் வெட்டி ஒரு நகரத்தையே பாலைவனம் ஆக்கியாகிற்று, என்ன ஒரு சாதனை!!

இந்த பூமி நமக்களித்த வளங்களை எல்லாம் நன்றாக சுரண்டிவிட்டு, நாம் இருதியாக நமது சந்ததியினருக்கு விட்டுப்போவது வெறும் கான்க்ரீட் காடுகளைத்தான்!

நேற்று "I am Legend" - இன் DVD வாங்கினேன். வாங்கும்போது சிறிது தயக்கமாகத்தான் இருந்தது, இந்தப்படத்தை பற்றி எந்த ஒரு பரபரப்பான செய்தியையும் கேட்டிருக்கவில்லையே. ஆனால் படத்தின் பெயர்மட்டுமல்ல படமே ஒரு Legend என்பதை பிறகு புரிந்துகொண்டேன்.


நம்மைத்தவிர, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் திடீரென்று இறந்துவிட்டால் என்னவாகும் என்று நாம் சில சமயம் நினைத்துப்பார்ப்போம். அந்த நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு மிகச்சிறந்த படம்தான் இது. வில்ஸ்மித்தை எனக்கு அவ்வளவாக பிடிக்காது, இந்த படம் பார்த்ததிலிருந்து நான் அவரின் ரசிகனாகவே மாறிவிட்டேன்!!

புற்று நோயை குணப்படுத்த, மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட வைரஸ் கிருமி, புற்று நோயை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவேகமாகப் பரவி மனித இனத்தையே அழித்து விடுகிறது. நியூயார்க்கில் கிருமியால் தாக்கப்படாத ஒரே மனிதன் Dr. Robert Neville (வில்ஸ்மித்), நோயால் தாக்கப்படாத மற்றவர்களை தேடுவதோடு, நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையிலும் இறங்குகிறார். உலகத்தில் உள்ள 90% மக்கள் கிருமியின் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர். 9% மக்கள் கிருமியால் தாக்கப்பட்டு, வெறிபிடித்த Zombi-களை போல அலைகின்றனர், மீதமுள்ள 1% மக்களும் தனிமை வாட்டத்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர், இன்னும் சிலர் கொலைசெய்யப்படுகின்றனர், வில்ஸ்மித் தனி மனிதனாக நியூயார்கில் வலம் வருகிறார். இந்த தனிமனிதன் தனது இனத்தை பல பிரச்சனைகளுக்கு மத்தியில் எவ்வாறு காப்பாறுகிறார் என்பதை அழகாக சொல்லும் படம்தான் "ஐ ஆம் லெஜன்ட்".

படத்தின் சிறப்பம்சங்கள்

* படத்தில் செட்டிங் மிகவும் அற்புதமாகவும் தனிமையின் கொடூரத்தை கண்முன் நிறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது


* இடையில் காட்டப்படும் ஃப்ளாஷ் பேக்குகள் மக்கள் இருக்கும் போது உள்ள நகரத்திற்கும், மக்கள் இல்லாத நகரத்திற்கும் வேறுபாட்டை அழகாக சொல்கிறது


* தனிமை வாழ்கையில் தனது ஒரே நண்பனான Sam என்ற நாயை இழந்து கதாநாயகன் தவிப்பது, Human Psychology-யை அப்படியே பிரதிபலிக்கின்றது


* வில்ஸ்மித், நாயை இழந்து வீடியோகடைக்கு வந்து பொம்மையிடம் ஹலோ சொல்லச்சொல்லி கெஞ்சுமிடத்தில் சென்டிமென்டாக நெஞ்சை தொட்டுவிடுகிறார்


* கதை சொல்லும் விதமும், character development-ம் மிக மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது


* படத்தில் எல்லாக்காட்சிகளிம் பல நுணுக்கங்கள் உள்ளன, வில்ஸ்மித் Shrek-3 படத்தை பார்த்து அனத்து வசனங்களையும் அச்சு அசலாக கூறும் போது அவர் அதை எத்தனை முறை பார்த்திருப்பார் என்பதும் தனிமை எவ்வளவு கொடுமை என்பதும் தெரியும்


* தனது ஆராய்ச்சியை பதிவுசெய்யும் காட்சிகள் மிக மிக நேர்த்தியானவை!!

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த ஒரு படம் பார்த்த திருப்தி மனதில் நிற்கின்றது. ஒருவழியாக பீமா முதல் நாள் காட்சி பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன்.

சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றும் ஒரு நண்பரிடம் இருந்து கசிந்த ஸ்கிரிப்ட் மற்றும் கதையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...

இந்த படத்தில் ரஜினி மூண்று வேடத்தில் நடிக்கிறார். மூண்று வேடத்தில் ரஜினி முன்பு தோன்றிய "மூண்று முகம்" படம் பிண்னி பெடலெடுத்ததால் சென்டிமென்டலாக இதை ரஜினியே முடிவு செய்ததாக பட்சிகள் கூறுகின்றன.

அமேரிக்காவில் உள்ள ஒரு பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ஒரு மனிதர் உரையாற்றிக்கொண்டிருக்கிறார் [எந்த மொழியில் என்றெல்லாம் அபத்தமாக கேள்வி கேட்க கூடாது, தமிழில் தான்!] அவரது முகம் வெகு அருகில் காட்டப்படும்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வரும் தோட்டா அவரது நெற்றிப்பொட்டில் பட்டு மூளையை சிதறடிக்கிறுது. மக்கள் பீதியில் அங்குமிங்கும் ஓட பதட்டம் பற்றிக்கொள்கிறது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, அதிகாலை 7:30, Pentagon அலுவலகத்தில், நிறைய பெரும் புள்ளிகள் ஒரு நீள்வட்ட மேஜையை ஆக்ரமித்திருந்தனர். ஒரு பெரிய ஆபீசர் மிகுந்த கோபத்தில் "அமேரிக்காவின் டிபன்ஸ் மினிஸ்டர் கொல்லப்பட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் கேஸில் எந்த முன்னேற்றமும் இல்லை!". "சார் கொலைகாரன் எந்த தடையத்தையும் விட்டுவைக்கவில்லை" என்கிறார் ஒரு ஆபீசர். ["அடுத்ததா கொலை பண்ணுறப்போ வீட்டு அட்ரஸ் எழுதிவைக்கச் சொல்லுறேன்" அப்டீனு எகத்தாளம் பேசக்கூடாது]. சரி இப்போ என்ன செய்யலாம் என்று அனைவரும் யோசிக்கும் போது. ஒரு ஆபீசர் எழுந்து... "இந்த அமேரிக்காவுலயே, ஏன் இந்த ஒலகத்துலயே இந்த கேசை முடிக்கக்கூடிய தெறம ஹரிக்குதான் இருக்கு...".

வேறு ஒரு இடத்தில் (குறைந்த வெளிச்சமுள்ள ஒரு அறை) கைப்பேசியின் அழைப்புமணி ஒலிக்கிறது. இருட்டிலிருந்து ஒரு கைநீண்டு கைப்பேசியை எடுத்து காதில் வைத்து (முகம் பாதி இட்டில் சரியாக தெரியாது).

முகம் தெரியாத மனிதன்: "ஹலோ"
எதிர் முனை: "மிஸ்டர் ஹரி?"
மு.தெ.ம: "என்ன விஷயம்?"
எ.மு: "அது ஹரியிடம் மட்டுமே சொல்லப்பட வேண்டும்"
(மு.தெ.ம திரைச்சீலையை விலக்க அது ஒரு சாதாரண அல்லக்கை என ஆடியன்ஸுக்கு தெரியவருகிறது)
அல்லக்கை: "இன்னிக்கு என்ன தேதி?"
எ.மு: "பிப்ரவரி 14"
அல்லக்கை: "அப்ப அண்ணன் ஐஸ்வர்யாகூட நயாகரால குளிச்சு, குத்தாட்டம் போட்டுக்கிட்டிருப்பார்!!!"

"அதான்டா... இதான்டா... ஜஸ் ஜோடி நான்தான்டா..." என்று பாடலுடன் ரஜினி அறிமுகமாகிறார். ஷங்கர், படத்தில் வித்தியாசம் காட்டுவதற்காக ரஜினியின் சோலோ இன்ட்ரோவை தவிர்த்து "ஐஸ்ஷு"டன் ஜோடியாக ஒரு குத்துப்பாட்டில் இன்ட்ரடியூஸ் செய்கிறார். பாடல் முடிந்ததும் சைரன் ஒலிக்க FBI வாகனங்கள் வந்து ரஜினியை சூழ்ந்து விடுகின்றன. மிஸ்டர். "ஹரி தங்கள் உதவி இப்போது எங்கள் FBI-க்கு தேவைப்படுகிறது" என்கிறார் தலைமை ஆபீசர். "நான் ஒரு சாதாரன ப்ரைவேட் டிடெக்டிவ், என் உதவி உங்களுக்கு எதுக்குசார்?" என்று ஹரிகேட்க, பின்னால் நிக்கும் அல்லக்கை ஆபீசர் (விவேக்???) "ஹரி, பெயரைக்கேட்டாலே குத்தவாலிக்கு புடிக்கும் சொறி!, அவரு குத்தவாலிக்கு வெக்குறது பொறி!, அப்படீனு எல்லோருக்கும் தெரியுமே சார்" என்று பஞ்ச் விடுகிறார். [இப்பவெல்லாம் அல்லக்கையை விட்டு பஞ்ச் விடுறதுதான் ஷங்கர் ஃபேசன்].

ஹரிக்கு நிலமை விவரிக்கப்படுகிறது [இடம், பொருள் எல்லாம் உங்களுக்கு எதுக்கு?]. ஹரி, விவேக் டிபன்ஸ் மினிஸ்டர் வீட்டில் ஆராயும்போது ஒரு லெட்டரை கண்டெடுக்கிறார் ஹரி. அந்த லெட்டரில் "முடிச்சிர்றேன்... உன்னை 12ந் தேதி முடிச்சிர்றேன்..." என்ற ஒற்றை வரிமட்டும் எழுதியிருந்தது. மறுநாள் செய்தித்தாளில் தமிழ்நாடு முக்கிய மந்திரிக்கு "முடிச்சிர்றேன்... 18ந் தேதி முடிச்சிர்றேன்..." என வந்த மிரட்டல் கடிதம் பற்றிய செய்தியை அறிந்து ரஜினி, ஐஸ், விவேக் சென்னை விரைகிறார்கள். ஐஸ் விமானத்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கும் ரஜினியை பார்க்கிறார். [கணவுல சுச்சர்லாந்து போய், ஒரு டூயட் பாடுனாங்கன்னு சொல்லனுமா என்ன?]

ஹரி, இன்னும் ஒரு கொலையை தடுக்க பல வியூகங்களை அமைக்கிறார். ஹரி, கொலை வெறிதனமான சேசிங்கில் ஒரு சர்வதேச தீவிரவாதி இதன் பின்னனியில் இருப்பதை போலீசுக்கு தெரியவைக்கிறார். போலீஸ் அந்த தீவிரவாதியை சுற்றி வளைக்கிறது. முகத்தை மறைத்த ஒருவர் ரகசியமாக ஒரு இடத்திற்கு செல்கிறார். முகத்திரையை விலக்கி அந்த இடத்தில் நுழைகிறார் ஹரி!! அங்கு அவர் வீல் சேரில் உட்கார்ந்து ஒரு கணிப்பொறியில் கவனமாயிருக்கும் ஒருவரை (இன்னும் நமக்கு முகத்தை காட்டவில்லை) சந்திக்கிறார். அவர் அருகில் சென்று தரையில் அமருகிறார். அவர் தலையை கோதிவிட்டபடி வீல் சேர் உருவம் திரும்ப.... இன்னொரு ரஜினி!!!! தரையில் அமர்ந்திருக்கும் ரஜினியின் தலையிலிருந்து கையை எடுக்காமல், வீல் சேர் ரஜினி கண்கள் மூடுகிறார் (அட கொசுவத்தி சுத்துறதுக்குதான்பா...)

[ஃப்ளாஷ் பேக் விரிகிறது]
NASA-வினி தலைமை விஞ்ஞானியாக வேலை பார்க்கும் ரஜினி(வேடம்-I)-யின் மகன் ஹரி(ரஜினி-II) கால் ஊனத்தால் நடக்கமுடியாமல் தவிக்கிறார். மகன்படும் வேதனையை கண்ட ரஜினி-I தானாக சிந்திக்கும் திறன் கெண்ட ஒரு இயந்திர மனிதனை(ரஜினி-III) உருவாக்கி மகனுக்கு உதவிசெய்ய வைக்கிறார். ஒரு நாள் மகன் ரஜினிக்கு ஃபோன் வருகிறது, "நான் நாசாவின் கட்டுப்பாட்டு அதிகாரி பேசுகிறேன், தங்கள் தந்தை NASA-LAB-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார்", என்று. அழுது புலம்பும் மகன் ரஜினி தந்தை உடலை பெருவதற்காக ரோபோ ரஜினியுடன், NASA செல்கிறார். அப்போது தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம்வர ரோபோ ரஜினியின் உதவியுடன் நாசா கண்கானிப்பு கேமாராவை ஹேக் செய்து. ஒரு அதிகாரி விபத்தை செட்டப்செய்து அதில் தன் தந்தையை சிக்கவைப்பதை அறிந்து கொதிக்கிறார். ரோபோ ரஜினியை பயன்படுத்தி கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கிறார். நாசாவின் ரகசியங்களை தீவிரவாதிகளுக்கு விற்க ஒரு உயர் அதிகாரி போடும் திட்டம் ரஜினி-I க்கு தெரிந்து விடுகிறது. அதனால் அந்த அதிகாரி ரஜினி-I ஐ கொண்று விடுகிறார். இதற்கெல்லாம் மூலகாரணமான முக்கியபுள்ளிகளின் பட்டியலை மகன் ரஜினி திரட்டுகிறார். அனைத்து தகவல்களோடு இந்தியா பறக்கிறார். அங்கிருந்தவாறு ரோபோ ரஜினியை இயக்கி பட்டியலில் இருக்கும் பெரும் புள்ளிகளை யாருக்கும் தெரியாமல் முடிக்கிறார்.
[ஃப்ளாஷ் பேக் முடிந்தது]

ரஜினியின் கணிப்பொறியில் உள்ள பட்டியலில் சிவப்பு கோடிடப்படாத ஒரே பெயர் அந்த "தமிழ்நாடு முக்கிய மந்திரி"! 18-ந் தேதி பலத்த பாதுகாப்புக்கு இடையே நடக்கும் பேரணியில் அந்த முக்கிய மந்திரி சுடப்படுகிறார். போலீஸ் ஒரு முகமூடி அணிந்த மனிதனை துரத்துகிறது துரத்தலின் போது ஒரு பர்ஸை தவரவிடுகிறான் அந்த முகமூடி மனிதன்! போலீஸுடனான மோதலில் அந்த முகமூடி மனிதன் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்து கூவத்தில் விழுந்து நொறுங்குகிறது. இதை கணினியில் பார்த்துக்கொண்டிருக்கும் வீல் சேர் ரஜினி கண்கள் கசிகிறார்!! அவரது கணினி "No Signal" என்று காட்டுகிறது. கைப்பற்றிய பர்ஸ்ஸில் உள்ள முகவரிக்கு விரைகிறது போலீஸ், அங்கு கிடைக்கும் ஆதாரங்களை FBI பெற்றுக்கொண்டு, அமேரிக்காவில் பதுங்கியிருக்கும் தீவிரவாதியை (நாசாவின் கண்கானிப்பு கேமராவில் பார்த்த அதே ஆள் என்று சொல்ல வேண்டுமா?) சுற்றி வளைக்கிறது!! இருட்டில் அமர்ந்திருக்கும் வீல் சேர் ரஜினியின் அறைகதவு தட்டப்படுகிறது!! கதவுக்கு வெளியில் அரைகுறை தோலுடனும், இரும்பு கரங்களுடனும் நிற்க்கும் ரோபோ ரஜினியின் க்ளோசப் காட்டப்பட்டு.... நன்றி வணக்கம் சொல்லப்படுகிறது!!!

--------------------------------------------------

கருப்பன்: (பக்கத்திலிருப்பவரிடம்) "யாருப்பா அது தூரத்துல எதையோ ஆட்டோவுல லோடு பண்ணுறது"
பக்கத்திலிருப்பவர்: யாரோ முரட்டு பசங்களா தெரியுது!!
கருப்பன்: ஏய், அவங்க லோடு பண்ணுறது உருட்டுக்கட்டை மாதிரியில தெரியுது
பக்கத்திலிருப்பவர்: மாதிரியெல்லாம் எல்லாம் இல்ல எல்லாம் ஒரிஜினல்
கருப்பன்: என்னப்பா நம்பள நோக்கி வருது??!!!
பக்த்திலிருப்பவர்: நம்பள நோக்கியில்லை, உன்னை நோக்கி வருது
கருப்பன்: ஐய்யய்யோ நான் கதையை லீக் பண்ணுன மேட்டரு ஷங்கருக்கு சிக்கிருச்சுபோல.... குதிச்சிருடா.... குதிச்சிருடா... கருப்பாஆஆஆஆஆஆஆ...........

"அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்", நம்மூர்காரர்களின் தாரக மந்திரம் இது! என் தம்பி ஒருநாள் காகிதக் குப்பையை கழிவுநீர் கால்வாயில் தூக்கி எரிந்தான். "ஏன்டா அது சாக்கடைய அடைச்சுக்காதா? அதை பத்தடி தள்ளியிருக்க குப்பை அள்ளுற இடத்துல போட வேண்டியதுதான" என்றேன். அதற்க்கு அவன் "ஏற்கனவே சாக்கடைக்குள்ள குப்பையை யாரோ போட்டிருக்கான்ல நான் போட்டா என்ன தப்பு?" என்று கேட்டான். அந்த பதில் என்னை ஒன்றும் ஆச்சர்யப்படுத்தவில்லை. ஏற்கனவே பலமுறை இந்த வசனத்தை பலரிடம் கேட்டிருக்கிறேன். ஓட்டு கேட்டு வருபவர்கள்கூட தான் செய்த/செய்யவிரும்பும் முன்னேற்ற பணிகள் பற்றி பிரச்சாரம் செய்வதைவிட அடுத்த கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு வாக்களிக்காமல் செய்வதில்தான் குறியாக இருப்பார்கள்.

அது சரி இப்ப எதுக்கு இந்த கதை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, இந்தா மேட்டருக்கு வந்துட்டேன்...

சமீபத்தில் இந்த சுட்டியில் உள்ள பதிவை படிக்க நேர்ந்தது. அனைகமாக இது பினாத்தலார் பதிவின் பின்விளைவு என்று நினைக்கிறேன் ;-) அதற்கு பின்னூட்டமிடப்போய் தனிப்பதிவாகவே ஆகிவிட்டது :-(

திருவள்ளுவருக்கு சிலை!
///
இத்தன கோடி செலவு பண்ணி வள்ளுவருக்கு சிலை வைப்பதற்க்கு பதிலா மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டலாமே! என்று கேள்வி கேட்டார்கள். ///

நிச்சயமாக அதை செய்திருக்கலாம், மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டுவது அப்படி ஒன்றும் பெரிய தப்பில்லையே.

///
ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே! சரி! விட்டு தள்ளு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி விவேகானந்தர் பாறையை பாராமரித்தலை நிறுத்த சொல்லுவியா!
///

அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன். சிலை வைப்பதும், மண்டபம் கட்டுவதும் கண்டிப்பாக தட்டிக்கேட்டிருக்கபடவேண்டிய விஷயம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அந்தப்பாறை சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது அதனால் அதை பராமரிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு.

///
ஆண்டு தோறும் கோயில் திருப்பணி என்று செலவிடப்படும் மக்கள் பணத்தில், வேறு ஏதாவது செய்யலாமே! மணியாட்டுற ஐயருக்கு கொடுக்கிற மாத சம்பளத்தை நிறுத்தி விட்டு வேறு உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்கலாமே!
///
மக்கள் பணத்தில் நல்ல விஷயங்கள் செய்வது வரவேற்கபடவேண்டிய விஷயம். திருப்பணியில் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. கோவிலை துடைத்து சுகாதாரமாக வைத்துக்கொண்டால் அதுவும் மக்களுக்கு செய்யும் நல்லது தான். திருப்பணி என்ற பெயரில் குடம் குடமாக பாலைவாங்கி அபிசேகம் செய்தால் கண்டிப்பாக கல் எரியவேண்டியது தான்!

///
இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்! ஏனென்றால் இ(ஐ)ந்து என்கிற அடையாளத்தை கட்டிக்காப்பதனுமே! ஆனால் தமிழன் தன் அடையாளத்தை காப்பாற்ற எதையாவது செய்தால் அதற்க்கு நொட்டை சொல்வீர்கள்!
///

திருவள்ளுவருக்கு சிலை அமைத்துதான் தமிழன் என்ற அடையாளத்த காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பது, இந்த முட்டாளுக்கு இப்போது தான் தெரிகிறது.

தமிழ் செம்மொழி என்கிற அறிவிப்பு!
///
இதை செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள். இதனால் என்ன பயன் என்று பட்டியல் போட்டார்கள். அட! ஒன்னுமே இல்லையே! அப்புறம் எதுக்கு அவசர, அவசரமா சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவித்தீர்கள்? ஏன்னா அது உங்க மொழி ஆனா தமிழ் தீண்டதகாதவர்களின் மொழி அப்படிதானே!
///

மறுபடியும் அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன். சமஸ்கிருதத்தை செம்மொழி ஆக்கினா நமக்கென்ன ஆக்காட்டி நமக்கென்ன. நம்ம தமிழ் செம்மொழி ஆனத நம்ம சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான்!

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பு!
நான் இந்த விளையாட்டுக்கு வரல சாமி ஏற்கனவே பினாத்தலார் பதிவுல சூடு கிளம்பிக்கிட்டிருக்கு.

கர்நாடகா மாநிலித்தில் நடந்த லாரி ஸ்டிரைக் உன்மையில் ஒரு கேளிக்கூத்தான விஷயம். நான் இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். பல விபத்துகளை சந்தித்திருக்கிறேன், சந்தித்தவர்களை கண்டுமிருக்கிறேன். கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்து மொத்த விபத்தில் சுமார் 15% மீதமுள்ள 85% விபத்துகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளால் எற்படுபவை. இருப்பினும் ஏன் அரசாங்கம் கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதென்றால், கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலும் உயிர்ச்சேதமிருக்கும்.

அரசாங்கம் கூறுவது என்னவென்றால் "கனரக மற்றும் சில நான்கு சக்கர வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட வேண்டும்". இவ்வாறு பொருத்தப்படும் கருவி வாகனத்தின் வேகத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு (60kmph என்று நினைக்கிறேன்) கீழ் இருக்குமாறு கட்டுப்படுத்தும்.

சரி இப்போது சில Facts-களை பட்டியலிடுவோம்...

1. லாரி போன்ற கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் பெரும்பாலும் வருவதில்லை அவை சுற்றுச்சாலையில் தான் செல்கின்றன.
2. மாநகராட்சி எல்லைக்குள் வரும் ஒரு சில லாரிகளும் 60kmph வேகத்தில் செல்வது இயலாத காரியம் (பெங்களூரு வாகன நெரிசல் அப்படி)
3. விபத்துகளுக்கு முக்கிய காரணம் கனரக வாகனங்கள் மட்டுமல்ல
4. மாநகராட்சி எல்லைக்குள் பயணிக்கக்கூடிய ஒரே கனரக/எம-வாகனம் KSRTC, BMTC பேருந்துகள் (இவையிரண்டும் கர்நாடக மாநில அரசின் கீழ் இயங்குபவை)
5. மக்களை பணிக்கு அழைத்துச்செல்லும் பல cab-களில் ஏற்கனவே இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கருவி பொறுத்தப்படுவதால் ஒரே ஒரு நன்மை மட்டுமே இருக்க முடியும் PRICOL போன்ற vendors கொள்ளை லாபம் அடிப்பார்கள். கருவி வாங்குவது கட்டாயமாக்கப்பட்டால் விற்பவன் செய்யும் அட்டகசம் அனைவருக்கும் தெரிந்ததே (தமிழ் நாட்டு ஹெல்மெட் நினைத்துப்பார்க்க). இன்றய விபத்துகளுக்கான காரணம் வேகம் இல்லை... வேகத்தால் வாகனம் ஓட்டிகளுக்கு ஆபத்தே தவிற மற்றவர்களுக்கு குறைவே.

கனரக வாகன விபத்துக்கான முக்கிய காரணங்கள்...

1. Negligence - சலைவிதிகளை மிதித்தல்
-- உண்மைச் சம்பவம் --
வெளிச்சுற்றுச்சாலையில் (outer ring road) உள்ள ஒரு சிக்னலில், பச்சை விளக்கை சற்று தூரத்தில் பார்த்துவிட்ட BMTC பஸ் ஓட்டுநர் வேகமாக வந்து சிக்னலை கடக்கலாம் என்று நினைத்து சிவப்பு சிக்னல் விழுந்ததை மதிக்காமல், சிக்னலை சரியாக கடைபிடித்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியை கூழ்கூழ் ஆக்கியது! இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் அந்த பஸ்ஸில் இந்த "so-called" வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளது.

2. அதிக பலு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள்
-- உண்மைச் சம்பவம் --
Service road-ல் இருந்து சுற்றுச்சாலைக்குள் கண்ணைமூடிக்கொண்டு நுழைந்த ஒரு இரு சக்கர வாகன ஓட்டி இளைஞன், அதிக பலு ஏற்றிக்கொண்டு மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த ஒரு லாரிக்கடியில் சிக்கி கிட்டத்தட்ட அவனது அனைத்து உடல் உருப்புகளும் திசைக்கொன்றாக ஒரு 50 மீட்டர் சுற்றளவுக்கு சிதறியதை வாழ்நாளில் மறக்க முடியாது.

3. கட்டமைப்பு குறைபாடு
-- உண்மைச் சம்பவம் --
ஓசூர் செல்லும் சாலயிலுள்ள வாகன நெரிசலை தவிற்க நினைத்த லாரி சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்று தலை குப்பற கவிழ்ந்து கிடந்தது.

சுருக்கமாக சொல்லப்போனால் வேகத்தால் ஏற்படும் விபத்துக்கள் மிகக்குறைவு அதற்காக இவ்வளவு அமளிதுமளி கிளப்பாமல். சாலைவிதிகளை கடைபிடிக்கச்செய்தல், கட்டமைப்பு மேம்பாடு போன்றவிஷயத்தில் கவனம் செழுத்தலாம். பார்வையற்றவனுக்கு கருப்பு கண்ணாடி கொடுப்பதற்கு முன் ஒரு கைத்தடி கொடுக்கலாமே!

பி.கு: கர்நாடகாவில் நடக்கும் சாலைவிபத்துகளில் பெரும்பான்மை, பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடக்கிறது!

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அம்மா பஞ்சமில்லாமல் அறிக்கை வாசித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே! சமீபகாலமாக அம்மாவிடம் அறிக்கைப்பஞ்சம் தலைவிரித்தாடுவது கண்கூடாக தெரிகிறது. எ.டு: இராமேஸ்வரத்தில் மாடுகள் இறந்து விட்டமையால் கலைஞர் பதவி விலகவேண்டும்... முதலில் படித்தவுடன் "என்ன கொடும சார் இது" என்று நொந்து கொண்டேன். உடனே எனது சிந்தனை குதிரையை தட்டிவிட்டு அம்மாவுக்கு அறிக்கைவிட உதவுவதற்காக ஒரு கையேட்டை தயாரிக்கும் முயர்ச்சியின் விளைவுதான் இந்த பதிவு...

பின்வரும் பட்டியலுக்கு தாங்களும் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

1. மக்களுக்கு என தேக்கிவைத்திருக்கும் ஏரித்தண்ணீரை "சூரியன்" உறுஞ்சிவிடுவதால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

2. கலைஞர் தொலைக்காட்சியில் வரும் நெடுந் தொடர்கள், மனைவிகளை கணவருக்கு அன்னமிடாமல் தடுக்கிறது. இது தான் தமிழகத்தில் பட்டினி சாவுக்கு காரணம்.

3. இலவச கேஸ் அடுப்புகளில் உள்ள ஓட்டைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து ஓசோன் படலத்தில் ஓட்டையைப் போடுகிறது.

4. திமுக ஆட்சியில் சத்துணவில் போடப்படும் முட்டைகள் சத்தாக இல்லாததனால்தான் மாணவர்கள், கணக்கிலும் அறிவியலிலும் முட்டை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

5. மஞ்சள் காமாலை நோய் மக்களுக்கு வருவதற்கு காரணமே கருணாநிதி மஞ்சள் துண்டு போடுவதுதான்.

பட்டியல் தொடரும்...