தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அம்மா பஞ்சமில்லாமல் அறிக்கை வாசித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே! சமீபகாலமாக அம்மாவிடம் அறிக்கைப்பஞ்சம் தலைவிரித்தாடுவது கண்கூடாக தெரிகிறது. எ.டு: இராமேஸ்வரத்தில் மாடுகள் இறந்து விட்டமையால் கலைஞர் பதவி விலகவேண்டும்... முதலில் படித்தவுடன் "என்ன கொடும சார் இது" என்று நொந்து கொண்டேன். உடனே எனது சிந்தனை குதிரையை தட்டிவிட்டு அம்மாவுக்கு அறிக்கைவிட உதவுவதற்காக ஒரு கையேட்டை தயாரிக்கும் முயர்ச்சியின் விளைவுதான் இந்த பதிவு...

பின்வரும் பட்டியலுக்கு தாங்களும் தங்களால் இயன்ற உதவியை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

1. மக்களுக்கு என தேக்கிவைத்திருக்கும் ஏரித்தண்ணீரை "சூரியன்" உறுஞ்சிவிடுவதால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

2. கலைஞர் தொலைக்காட்சியில் வரும் நெடுந் தொடர்கள், மனைவிகளை கணவருக்கு அன்னமிடாமல் தடுக்கிறது. இது தான் தமிழகத்தில் பட்டினி சாவுக்கு காரணம்.

3. இலவச கேஸ் அடுப்புகளில் உள்ள ஓட்டைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து ஓசோன் படலத்தில் ஓட்டையைப் போடுகிறது.

4. திமுக ஆட்சியில் சத்துணவில் போடப்படும் முட்டைகள் சத்தாக இல்லாததனால்தான் மாணவர்கள், கணக்கிலும் அறிவியலிலும் முட்டை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது.

5. மஞ்சள் காமாலை நோய் மக்களுக்கு வருவதற்கு காரணமே கருணாநிதி மஞ்சள் துண்டு போடுவதுதான்.

பட்டியல் தொடரும்...

1 மறுமொழிகள்:

Anonymous said...

தள்ளாடும் அம்மா என்று தலைப்பு கொடுத்துடன் கலைஞர் முன்பு ஒரு முறை சொன்னது போல் அதிகம் ஆகிவிட்டதோ என நினைத்தேன்.