கர்நாடகா மாநிலித்தில் நடந்த லாரி ஸ்டிரைக் உன்மையில் ஒரு கேளிக்கூத்தான விஷயம். நான் இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். பல விபத்துகளை சந்தித்திருக்கிறேன், சந்தித்தவர்களை கண்டுமிருக்கிறேன். கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்து மொத்த விபத்தில் சுமார் 15% மீதமுள்ள 85% விபத்துகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளால் எற்படுபவை. இருப்பினும் ஏன் அரசாங்கம் கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறதென்றால், கனரகவாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலும் உயிர்ச்சேதமிருக்கும்.

அரசாங்கம் கூறுவது என்னவென்றால் "கனரக மற்றும் சில நான்கு சக்கர வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி பொருத்தப்பட வேண்டும்". இவ்வாறு பொருத்தப்படும் கருவி வாகனத்தின் வேகத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு (60kmph என்று நினைக்கிறேன்) கீழ் இருக்குமாறு கட்டுப்படுத்தும்.

சரி இப்போது சில Facts-களை பட்டியலிடுவோம்...

1. லாரி போன்ற கனரக வாகனங்கள் மாநகர எல்லைக்குள் பெரும்பாலும் வருவதில்லை அவை சுற்றுச்சாலையில் தான் செல்கின்றன.
2. மாநகராட்சி எல்லைக்குள் வரும் ஒரு சில லாரிகளும் 60kmph வேகத்தில் செல்வது இயலாத காரியம் (பெங்களூரு வாகன நெரிசல் அப்படி)
3. விபத்துகளுக்கு முக்கிய காரணம் கனரக வாகனங்கள் மட்டுமல்ல
4. மாநகராட்சி எல்லைக்குள் பயணிக்கக்கூடிய ஒரே கனரக/எம-வாகனம் KSRTC, BMTC பேருந்துகள் (இவையிரண்டும் கர்நாடக மாநில அரசின் கீழ் இயங்குபவை)
5. மக்களை பணிக்கு அழைத்துச்செல்லும் பல cab-களில் ஏற்கனவே இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கருவி பொறுத்தப்படுவதால் ஒரே ஒரு நன்மை மட்டுமே இருக்க முடியும் PRICOL போன்ற vendors கொள்ளை லாபம் அடிப்பார்கள். கருவி வாங்குவது கட்டாயமாக்கப்பட்டால் விற்பவன் செய்யும் அட்டகசம் அனைவருக்கும் தெரிந்ததே (தமிழ் நாட்டு ஹெல்மெட் நினைத்துப்பார்க்க). இன்றய விபத்துகளுக்கான காரணம் வேகம் இல்லை... வேகத்தால் வாகனம் ஓட்டிகளுக்கு ஆபத்தே தவிற மற்றவர்களுக்கு குறைவே.

கனரக வாகன விபத்துக்கான முக்கிய காரணங்கள்...

1. Negligence - சலைவிதிகளை மிதித்தல்
-- உண்மைச் சம்பவம் --
வெளிச்சுற்றுச்சாலையில் (outer ring road) உள்ள ஒரு சிக்னலில், பச்சை விளக்கை சற்று தூரத்தில் பார்த்துவிட்ட BMTC பஸ் ஓட்டுநர் வேகமாக வந்து சிக்னலை கடக்கலாம் என்று நினைத்து சிவப்பு சிக்னல் விழுந்ததை மதிக்காமல், சிக்னலை சரியாக கடைபிடித்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியை கூழ்கூழ் ஆக்கியது! இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் அந்த பஸ்ஸில் இந்த "so-called" வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளது.

2. அதிக பலு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள்
-- உண்மைச் சம்பவம் --
Service road-ல் இருந்து சுற்றுச்சாலைக்குள் கண்ணைமூடிக்கொண்டு நுழைந்த ஒரு இரு சக்கர வாகன ஓட்டி இளைஞன், அதிக பலு ஏற்றிக்கொண்டு மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்த ஒரு லாரிக்கடியில் சிக்கி கிட்டத்தட்ட அவனது அனைத்து உடல் உருப்புகளும் திசைக்கொன்றாக ஒரு 50 மீட்டர் சுற்றளவுக்கு சிதறியதை வாழ்நாளில் மறக்க முடியாது.

3. கட்டமைப்பு குறைபாடு
-- உண்மைச் சம்பவம் --
ஓசூர் செல்லும் சாலயிலுள்ள வாகன நெரிசலை தவிற்க நினைத்த லாரி சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்று தலை குப்பற கவிழ்ந்து கிடந்தது.

சுருக்கமாக சொல்லப்போனால் வேகத்தால் ஏற்படும் விபத்துக்கள் மிகக்குறைவு அதற்காக இவ்வளவு அமளிதுமளி கிளப்பாமல். சாலைவிதிகளை கடைபிடிக்கச்செய்தல், கட்டமைப்பு மேம்பாடு போன்றவிஷயத்தில் கவனம் செழுத்தலாம். பார்வையற்றவனுக்கு கருப்பு கண்ணாடி கொடுப்பதற்கு முன் ஒரு கைத்தடி கொடுக்கலாமே!

பி.கு: கர்நாடகாவில் நடக்கும் சாலைவிபத்துகளில் பெரும்பான்மை, பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடக்கிறது!

0 மறுமொழிகள்: